எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் : சேலத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரி இந்த ஆண்டே துவக்கப்படும் என்றும், போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.
சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- சம்பா சாகுபடிக்கு எப்பொழுது தண்ணீர் திறக்கப்படும்?
பதில்:- 90 அடி உயரத்திற்கு தண்ணீர் இருக்கும் பொழுது திறந்தால் தான் விவசாயிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர் கிடைக்கும். இப்பொழுது உடனே திறந்தால், இடையில் தண்ணீர் கிடைக்காமல் போய்விட்டால் விளைச்சல் முதிர்ச்சி பெறுகின்றபொழுது பயிர்கள் பதராகப் போய் விடும். கடந்த காலத்தில், இரண்டு வருடத்திற்கு முன்பு 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் பதராகப் போய் விட்டது. அப்பொழுது நாம் கர்நாடகாவிடம் 3 டி.எம்.சி. தண்ணீர் கொடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சி கேட்டபொழுதும் கொடுக்கவில்லை. இரண்டாண்டுகள் இதுபோன்ற நிலைமையை நாம் சந்தித்தோம். அதனால், போதிய தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தவுடன் டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்பொழுது, கேரளாவிலும், குடகுவிலும் மழை அதிக அளவில் பொழிந்து கொண்டிருப்பதினால், கர்நாடக அணைக்கு தண்ணீர் வருகின்ற பொழுது தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய பங்கு நீர் முழுவதும் கிடைப்பதற்கு அரசு தொடர்ந்து பாடுபட்டு, டெல்டா பாசன விவசாயிகளுக்கு சம்பா சாகுபடி செய்வதற்குண்டான நீரை திறந்து விடப்படும்.
கேள்வி:- கர்நாடகா முதல்வரிடம் கூடுதலாக தண்ணீர் கேட்க வாய்ப்பிருக்கின்றதா?
பதில்:- தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரையே கொடுக்காமல் இருக்கின்ற பொழுது கூடுதலாக எப்படிக் கேட்க முடியும்? கொடுத்தால் சந்தோஷம் தான். தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர் கிடைத்தாலே போதும்.
கேள்வி:- ஆடி 18-க்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பிருக்கிறதா?
பதில்:- நீர் வருவதை வைத்துத் தான் திறந்துவிட முடியும்.
கேள்வி:- விரைவுச் சாலை திட்டம்...
பதில்:- இன்று காலையில் தமிழ்நாடு கிராம வங்கி விழாவின்போதுகூட, கிட்டத்தட்ட 70 விவசாயிகள், எங்களுடைய நிலத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு வேலைவாய்ப்பு மட்டும் கொடுங்கள். விரைவுச் சாலை வந்தால் நல்லது என்று மனு கொடுத்தார்கள். விரைவுச் சாலையை பலர் விரும்புகின்றார்கள். சிலர் வெறுக்கின்றார்கள். விரைவுச் சாலை சேலத்திற்கு மட்டுமல்ல, நாமக்கல், கரூர், மதுரை என்று கேரளா வரைக்கும் செல்கின்றது. இது மத்திய அரசின் மிக முக்கியமான திட்டம், முழுக்க, முழுக்க மத்திய அரசின் நிதியில் நிறைவேற்றப்படுகிறது. ஊடகத்தினரும் பலமுறை இதுகுறித்து கேட்டுவிட்டீர்கள். தமிழக அரசுக்கு, யாரையும் வற்புறுத்தியோ, மன சங்கடத்திற்கு உள்ளாக்கியோ நிலத்தை பெறவேண்டுமென்ற எண்ணம் ஒரு சதவிகிதம் கூட கிடையாது. சேலத்தில் தொப்பூர் முதல் ஓமலூர் வரை எத்தனை உயிர்ப்பலி ஏற்படுகின்றது? அதிக வாகனப் பெருக்கம் காரணமாக 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலைகளை மாற்றி இன்றைய தேவைக்கேற்ற சாலைகளை அமைப்பது தான் அரசின் கடமை.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மத்தியில் இருந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 734 கிலோமீட்டர் நீளத்திற்கான சாலைகளை விரிவுபடுத்தி பல்வேறு இடங்களில் புறவழிச் சாலை அமைத்தனர். தற்பொழுது அதைவிடவும் கூடுதலான சாலை தேவைப்படுகின்றது. அப்பொழுது 100 வாகனமென்றால் தற்பொழுது 400 வாகனமாக பெருகி 300 மடங்கு அதிகமாகிவிட்டது. இந்த 300 மடங்கு அதிகமான வாகனம் செல்வதற்கு பழைய சாலைகளை மாற்றி அமைக்க வேண்டுமல்லவா? மேலும், இந்தச் சாலைகளை நவீன முறையில், விபத்தில்லாமல் இருப்பதற்கான முறையில் அமைக்கவிருக்கின்றார்கள். இதனால், கிட்டத்தட்ட 60, 70 கிலோமீட்டர் பயண தூரம் குறைகின்றது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகின்றது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் போது நிலம் கையகப்படுத்தும்பொழுது அதில் அமைந்துள்ள வீட்டிற்கு உண்டான கழிவுத் தொகைக்கான பணத்தைத்தான் வழங்கினார்கள். இப்பொழுது கழிவுத் தொகை இல்லாமலேயே பணம் வழங்குகின்றனர். அதேபோல, தென்னை மரத்திற்கு கிட்டத்தட்ட ரூபாய் 30 ஆயிரம், ரூபாய் 40 ஆயிரம் வழங்குகின்றார்கள். எனவே, எந்தவிதத்திலும் யாருக்கும் நஷ்டம் ஏற்படாவண்ணம் வழங்க வேண்டுமென்று நாங்கள் மத்திய அரசை கேட்டிருக்கின்றோம்.
நம்முடைய பகுதி வளர்ந்து வருகின்ற ஒரு பகுதியாக உள்ளதாலும், புதிய கல்லூரிகளை அதிகமாக திறந்து கொண்டிருப்பதாலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியுள்ளதாலும், புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு நல்ல சாலை வசதி தேவையல்லவா? உள்கட்டமைப்பை ஏற்படுத்தினால் தான் தொழில் வளம் பெருகி, வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு, நம்முடைய மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். மக்களின் நலன், ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு தான் நாங்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
கேள்வி:- தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டுவது தொடர்பாக நெல்லை, கோவையில் பலரை கைது செய்திருக்கின்றார்கள். தீவிரவாதத்தைத் தடுப்பதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?
பதில்:- தீவிரவாதத்தைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குக்கூட தமிழக உளவுத் துறை எச்சரிக்கை கொடுத்தது. அதை அவர்கள் சரியாக பொருட்படுத்தவில்லை. தமிழகத்தின் உளவுத் துறை சரியான நேரத்தில், சரியான தகவலை மத்திய அரசிற்கு கொடுத்து இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநில அரசு, மத்திய அரசிற்கு துணை நிற்கின்றது.
கேள்வி:- அதிமுக-வின் உண்மையான தொண்டர்கள் தி.மு.க.-விற்கு வந்து கொண்டிருப்பதாக ஸ்டாலின் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:- உங்களுக்குத் தெரியுமா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒரு உறுப்பினரையும் தொட்டுப் பார்க்க முடியாது. அனைவரும் எம்.ஜி.ஆர் வழியிலே வந்து, அம்மா வழியிலே நின்று, இன்று இருபெரும் தலைவர்களின் ஆட்சியும், கட்சியும் நிலைத்து நிற்க வேண்டுமென்று உள்மனதோடு, மனமகிழ்ச்சியோடு எங்களோடு இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காணும் கனவு, எந்தக் காலத்திலும் நனவாகாது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று நினைத்தார்கள், நீங்களும் பலமுறை என்னிடம் கேள்வி கேட்டீர்கள். அதற்குண்டான பதிலையும் பலமுறை சொல்லி விட்டேன். இப்பொழுது இரண்டாண்டு முடிந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். 2021-லும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் அமையும்.
கேள்வி:- அ.ம.மு.க. நிர்வாகிகளை இழுப்பதற்கு நீங்கள் பணம் மற்றும் டெண்டர் தருவதாக சொல்லியிருப்பதாகவும், அதற்கான ஆடியோவை வெளியிடுவதாகவும் தினகரன் சொல்லியிருக்கின்றாரே?
பதில்:- ஆடியோ வெளியிடட்டும், நாங்களும் தயாராக இருக்கின்றோம். அவர் ஏதாவதொரு டூப் விட்டுக் கொண்டு தான் இருப்பார். எல்லோரும் எங்களிடம் வந்துவிட்டார்கள் அல்லவா? எல்லோரும் வந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா? அ.ம.மு.க.-விற்குச் சென்றவர்கள் எல்லாம் சாரை, சாரையாக இன்று தாய்க் கழகத்திற்குத் திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள். இங்கிருந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மூவரும் இப்பொழுது எங்களுடன் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். முழு ஒத்துழைப்பையும் தருவதாக சொல்லியிருக்கின்றார்கள். அதேபோல, மாநிலம் முழுவதும் அ.ம.மு.க.-வில் இருப்பவர்கள் தாய்க் கழகத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றார்கள். இன்று அ.தி.மு.க. பலம் பொருந்திய இயக்கமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சேலத்தில் அரசின் சார்பாக புதிய அரசு சட்டக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டே துவக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.