எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : அருண் ஜெட்லி மரணம் தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அருண் ஜெட்லி மறைவு செய்தி கேட்டதும் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி. ஜெட்லியின் மறைவைத் தொடர்ந்து சென்னையிலிருந்து நெல்லூருக்கு புறப்படவிருந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லிக்குத் திரும்பினார். ஜெட்லி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் ,
அருண் ஜெட்லியின் மரணம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது . ஒரு சிறந்த வழக்கறிஞர். ஒரு அனுபவமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு புகழ்பெற்ற அமைச்சர். அவர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மகத்தான பங்களிப்பை வழங்கி உள்ளார். அவர் கடந்து சென்றது நமது பொது வாழ்க்கையிலும், நமது அறிவுசார் சுற்றுச்சூழல் அமைப்பிலும் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது நண்பர்களுக்கும் எனது இரங்கல் என கூறி உள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்,
அருண்ஜெட்லியின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. இது எனக்கு தனிப்பட்ட இழப்பு ஆகும். கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான குடும்ப உறுப்பினரையும் நான் இழந்து விட்டேன், அவர் எப்போதும் எனக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார் என கூறி உள்ளார்.
அவர் சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார். நுணுக்க சட்ட அறிவு உடையவர். ஜெட்லி தேசத்திற்கும், ஜன சங்கத்துக்கும் அர்ப்பணிப்பு மற்றும் வைராக்கியத்துடன் சேவை செய்தார். அவருக்கு எனது அஞ்சலி. அன்புக்குரியவர்களுக்கு இரங்கல். ஓம் சாந்தி என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கூறி உள்ளார்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான ஜெட்லியின் அகால மரணம் தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். சட்டம் மற்றும் ஒரு அனுபவமிக்க அரசியல் தலைவர். துக்கத்தின் இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து கொள்கிறேன் என கூறி உள்ளார்.
மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்,
எங்கள் அன்பான நண்பர், சட்ட மூளை உடையவர், கூர்மையான மனம், புத்திசாலித்தனமான மூலோபாயவாதி. அனுபவமுள்ள அரசியல்வாதி. முன்மாதிரியான நாடாளுமன்ற உறுப்பினர். அவரை ஒருபோதும் மறக்க முடியாது. ஓம் சாந்தி என கூறி உள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்,
ஜெட்லியின் இழப்பை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. நம்மில் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார். தார்மீக ஆதரவும் பலமும் அளித்து வந்தார். அவரிடமிருந்து அதிகம் கற்றுக் கொண்டேன். சிறந்த பெரிய, இதயமுள்ள நபர். அனைவருக்கும் உதவ எப்போதும் தயாராக இருப்பார். அவரது புத்திசாலித்தனம், மதிநுட்பம் ஆகியவற்றுக்கு யாரையும் ஒப்பிட முடியாது என கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில்,
அருண் ஜெட்லி காலமான செய்தியை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கல். துக்கத்தின் இந்த நேரத்தில் நம் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன என கூறப்பட்டு உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் டுவீட்டில்,
ஜெட்லி காலமானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். அனைத்து கட்சிகளாலும் பாராட்டப்பட்டார். இந்திய அரசியலுக்கு அவர் செய்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுக்கு எனது இரங்கல் என கூறி உள்ளார். அருண் ஜெட்லி மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது என தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறி உள்ளார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக கட்சித் தலைவர்களும் ஜெட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
படித்த பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய நடிகர் அப்புக்குட்டி
12 May 2024சென்னை : தான் படித்த பள்ளிக்கு ரூ. 11 லட்சம் செலவில் மேஜை, கம்ப்யூட்டர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை நடிகர் அப்புக்குட்டி வழங்கி உள்ளார்.