முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் : காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின்பு அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தொலைபேசி, இணையதள சேவை தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் வெளியுலக தொடர்பை இழந்தனர். அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் நிலைமை இன்னும் முழுமையாக சீரடையவில்லை.

மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் முக்கியமான சாலைகள் மூடப்பட்டன. அங்கு ஏராளமான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். லால் சவுக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மருத்துவ பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு செல்லக்கூட பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த 36-வது நாளான நேற்று கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. எனினும், ஸ்ரீநகர் உள்ளிட்ட சில இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லால்சவுக் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. எனினும், சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாடுகள் நீடிப்பதால், காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை 36-வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து