முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை இழக்க வேண்டாம்! சிறு, குறு வியாபாரிகளுக்கு கட்காரி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஆட்டோமொபைல், சிறுகுறு வியாபாரிகள் மற்றும் சரிவை சந்தித்து வரும் பிற உற்பத்தி துறைகளை சேர்ந்தவர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், சமீபத்தில் நடந்த ஆட்டோமொபைல் துறை தொடர்பாக இந்திய அளவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட போது ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களை நான் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் கவலை தெரிவித்தனர். வாழ்க்கை ஒரு வட்டம். இதில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி வரும். மகிழ்ச்சியும், துக்கமும் கலந்து வரும் என்றேன்.மிக மோசமான தருணத்தை தொழில்துறை எதிர்கொண்டு வருவதை நான் அறிவேன். உற்பத்தி விகிதத்தை உயர்த்த விரும்புகிறோம். சர்வதேச பொருளாதாரம், தேவை, சப்ளை ஆகியவை சில பிரச்னைகளில் இருந்துள்ளன. உலகம் முழுவதும் இதே பிரச்னை உள்ளது. அதனால் அதிருப்தி அடைந்து விட வேண்டாம். இந்த காலம் கடந்து செல்லும். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை இழந்து விட வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து