எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி : சவுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர வாய்ப்பு உள்ளது.
சவுதிஅரேபியாவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிணறு மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி கணிசமாக குறைந்து விட்டது. உலகிற்கு தேவையான கச்சா எண்ணெயில் 10 சதவீதத்தை சவுதிஅரேபியா வழங்கி வருகிறது. அது தற்போது பாதியாக குறைந்து விட்டது.
சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி மேலும் சரியும் என்று தெரிய வந்துள்ளது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் விலை 20 சதவீதம் உயர்ந்தது. நேற்று 13 சதவீதம் அதிகரித்தது.
கடந்த வாரம் தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60 டாலராக இருந்தது. கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதும் அது 71.57 டாலராக உயர்ந்தது.
நேற்று சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 68.06 டாலராக இருந்தது. வரும் வாரங்களில் அது 70 டாலராக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டு வளைகுடா போர் நடந்தபோது தான் கச்சா எண்ணெய் மிக உச்சத்தை தொட்டு இருந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்ற விலை உயர்வை தற்போது கச்சா எண்ணெய் எட்டியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால் அது இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்க்கு இந்தியா, வளைகுடா நாடுகளையே நம்பியுள்ளது. அதாவது ஆண்டு தோறும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இறக்குமதி செய்தே சமாளித்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் ஈராக், சவுதி அரேபியா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளிடம் இருந்துதான் இந்தியா அதிக கச்சா எண்ணெய்யை பெறுகிறது. கடந்த 2018-19-ம் ஆண்டு இந்தியா சுமார் 226 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து இருந்தது. இதில் ஈராக்கிடம் இருந்து 46.6 மில்லியன் டன், சவுதி அரேபியாவில் இருந்து 40.3 மில்லியன் டன், ஈரானில் இருந்து 23.9 மில்லியன் டன் கச்சா எண்ணெய் பெறப்பட்டது.
கடந்த ஆண்டு மட்டும் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20 சதவீதத்தை சவுதி அரேபியாவிடம் இருந்து இந்தியா பெற்றிருந்தது. தற்போது இதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் எந்த தட்டுப்பாடும் வராது என்று சவுதிஅரேபியா தெரிவித்துள்ளது.
என்றாலும் சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்துள்ளதால், நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவில் பாதிப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் நிர்ப்பந்தத்துக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எம்.கே.சுராணா கூறுகையில், “கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரித்தால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம்” என்றார்.
இன்னும் சில தினங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.