முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை நோக்கி நகர்கிறது மேலடுக்கு சுழற்சி- 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று, மற்றும் நாளை  ஆகிய இரண்டு நாட்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வாகனம் மேகமூட்டத்துடன் கணப்படும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாயப்பு உள்ளது. தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று மாலை மதுரையில் விளாங்குடி,காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.தஞ்சையில் சூரக்கோட்டை, வல்லம் உள்ளிட்ட இடங்களிலும் திருப்பூரில் பல பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து