முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் பலி

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

டெக்ரான் : ஈரான் நாட்டில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். 92 பேர் காயமடைந்தனர்.

ஈரான் நாட்டின் சிஸ்டன் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சகேதன் நகரில் இருந்து தலைநகர் டெக்ரானுக்கு பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. சுமார் 250 பயணிகளுடன் சென்ற அந்த ரயில் குரின் மாவட்டத்தின் ஷுரு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 92 பயணிகள் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்பகுதிகளில் வீசும் அதிகப்படியான காற்றினால் தண்டவாளங்கள் மணலால் மூடப்படுகின்றன. இதனால் இம்மாதிரியான விபத்துக்கள் நிகழ்கின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து