முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரம் உச்சிமாநாட்டின் போது சிறப்பான ஏற்பாடுகள்: தமிழக முதல்வர் எடப்பாடிக்கு சீனத் தூதர் பாராட்டு கடிதம்

வெள்ளிக்கிழமை, 25 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

மாமல்லபுரத்தில் நடந்த இந்திய - சீன தலைவர்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில்  செய்ததற்காக தமிழக முதல்வருக்கு சீன தூதர் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்தியாவுக்கான சீனத் தூதர் சன்வெய்டங் கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் அக்.11,12ல் நடந்தது. அப்போது பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கிற்கும்  தமிழக அரசு சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் அவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இரவு விருந்தில் சீன அதிபருக்கு தமிழக பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டன. மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை பிரதமர் மோடியும், சீன அதிபரும் சுற்றி பார்த்து வியந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய - சீன உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறந்த முறையில் செய்தமைக்காக தமிழக முதல்வருக்கு இந்தியாவிற்கான சீன நாட்டு தூதர்  சன்வெய்டங் பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்தியா - சீன உச்சிமாநாட்டிற்கு வருகை புரிந்த சீன அதிபர் மற்றும் குழுவினருக்கு மிகச் சிறந்த முறையில் வரவேற்பு ஏற்பாடுகளை செய்ததற்காகவும், வழியெங்கும் சிறப்பான பல்வேறு கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததற்காகவும், சிறந்த உபசரிப்பிற்காகவும், தமிழக அரசிற்கும், முதல்வர் பழனிசாமிக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். சீன இந்திய மக்களிடையே கலாச்சாரம் மற்றும் பரிமாற்றங்களையும் மென்மேலும் மேம்படுத்துவோம் என்றும் தனது நன்றி கடிதத்தில் சீன தூதர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து