முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

 சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று 6 - ம் தேதி ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.  இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் இன்று 6 - ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில், தமிழக உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இது ஆளும் கட்சிக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக உள்ளாட்சி தேர்தலையும் சந்திக்க  அ.தி.மு.க. அரசு தயாராகி வருகிறது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை செய்து வந்தது. இந்த பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை 3 - கட்டங்களாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அட்டவணை தயாரித்துள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து