முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி தீர்ப்பு; மக்களின் பாதுகாப்புக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு: மாயாவதி

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த 16-ம் தேதி நிறைவடைந்தன. முன்னதாக அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளியாகும் என்று சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அயோத்தி வழக்கு தீர்ப்பையொட்டி உத்தரப் பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இது குறித்து நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. இதனால் நாடுமுழுவதுமே ஒருவித இறுக்கமான சூழல் நிலவுகிறது. மக்கள் மனதில் சந்தேகமும் காணப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்க வேண்டும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், உ.பி. அரசுக்கும் உள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து