எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவையில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்தள்ளுபடி செய்து அவருக்கு தூக்கு தண்டனையையும் உறுதி செய்தது.
கோவை ரங்கேகவுடர் வீதியை சேர்ந்த தொழிலதிபர் ரஞ்சித்குமார் ஜெயின் - சங்கீதா தம்பதியரின் 2 குழந்தைகளும் பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் கொன்று வீசப்பட்டிருந்தனர். 5-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி முஸ்கின், 3-ம் வகுப்பு படித்து வந்த அவளது தம்பி ரித்திக் இருவரும் கால்டாக்சியில் பள்ளிக்கு சென்று வந்தனர். கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற போதுதான் காரில் கடத்தி கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அப்போது கோவை போலீஸ் கமிஷனராக இருந்த சைலேந்திர பாபு தலைமையிலான போலீசார் துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடித்தனர். கால் டாக்சி ஓட்டுனர் மோகன்ராஜ், அவனது கூட்டாளி மனோகரன் ஆகிய இருவரும் திட்டம் போட்டு இருவரையும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சிறுமி முஸ்கினை, டிரைவர் மோகன்ராஜ், மனோகரன் இருவரும் கற்பழித்து கொலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் பொள்ளாச்சிக்கு அழைத்து சென்ற போது தப்பியோடிய மோகன்ராஜ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது கூட்டாளி மனோகரன் கோவை சிறையில் அடைக்கப்பட்டான். கோவை மகிளா கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
2 ஆண்டுகளுக்கு பிறகு மகிளா கோர்ட் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளி மனோகரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை மற்றும் 3 ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மனோகரன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் 2 ஆண்டுகளாக நடைபெற்றது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி ஐகோர்ட்டும் மனோகரனின் தண்டனையை உறுதி செய்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து மனோகரன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு இது தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அப்போதும் மனோகரனின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகரன் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நாரிமன், சூரியகாந்த், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனோகரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனோகரனின் தூக்கு தண்டனையை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று நீதிபதிகள் நாரிமன், சூரியகாந்த் கூறினர். ஆனால் மற்றொரு நீதிபதியான சஞ்சீவ்கண்ணா மனோகரனுக்கு சிறை தண்டனை மட்டும் போதும் என்ற தனது கருத்தை பதிவு செய்தார். இருப்பினும் 2 நீதிபதிகள் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் மனோகரனின் சீராய்வு மனு தள்ளுபடியானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
04 Feb 2026- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருமயம் ஆண்டாள் எண்ணெய்க் காப்பு விழா தொடக்கம்.
-
இன்றைய நாள் எப்படி?
04 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
04 Feb 2026


