முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் காயம்

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங்கில் நேற்று காலை நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்தும், கூடுதலான ஜனநாயக உரிமைகள் கோரியும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் போராட்டத்தின் போது காயமடைந்த சவுஸ்லாக் என்ற இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை போராட்டக்காரர்கள் சை வான் ஹோ பகுதியை முற்றுகையிட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து காவலர் ஒருவர் முகமூடி அணிந்த நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அந்நபரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்த காவலர் மூன்று முறை துப்பாக்கியால் சுடும் சத்தம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஹாங்காங் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து