முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் சரணடைந்த 900 ஐ.எஸ். தீவிரவாதிகளில் 10 இந்தியர்கள்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

காபூல் : ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 900 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படையிடம் சரணடைந்திருப்பதாகவும், அதில் 10 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த 12-ம் தேதி நடவடிக்கையின்போது, 13 பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 93 ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் சரணடைந்தனர்.

இதேபோல, கடந்த இரு வாரங்களில் மொத்தம் 900 பேர் சரணடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சரணடைந்தவர்களில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளும் அவர்களது குடும்பத்தினரும் அடக்கம்.

அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் சரணடைந்துள்ளதாகவும், அதில் கேரளத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இந்த 10 பேரும் காபூலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் யார் என்ற விவரங்களை அதிகாரிகள் திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து