எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது என்று தெரிவித்தார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளித்துள்ளது. அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம் என்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- 9 மாவட்டங்களுக்கு 4 மாதத்திற்குள் மறுவரையறை செய்து தேர்தல் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கை குறித்து...
பதில்:- இது முழுக்க, முழுக்க மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. எனவே, நீங்கள் தேர்தல் ஆணையத்தைத்தான் கேட்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் என்ன தீர்ப்பு கொடுத்திருக்கிறதோ, அதன் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டவுடன், நாங்கள் முழு ஈடுபாட்டுடன் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவோம். இன்றையதினம் எங்கள் கூட்டணியோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.
கேள்வி:- ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு அறிவிக்கவில்லை, இது வன்முறையை ஏற்படுத்துமென்றும், இது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்குமென்றும், எதிர்க்கட்சித்தலைவர் கூறியிருக்கிறாரே?
பதில்:- அவர் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் மக்களை சந்தித்து, வாக்குகளைக் கேட்டு, வெற்றி பெறுவதுதான் ஜனநாயகம். அதை விட்டுவிட்டு, தோல்வி பயத்தில் இன்றைக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். எங்களைப் பொறுத்தவரையில் மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த நடைமுறையின்படி, அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து நிறுத்துகின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
கேள்வி:- ஏற்கனவே அறிவித்த தேர்தல் செல்லாது என்று சொல்லியிருக்கிறார்கள்?
பதில்:- இதெல்லாம் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை, அரசு அல்ல, தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.
கேள்வி:- இன்னும் வேட்பாளர் அறிவிக்காததன் காரணம் என்ன?
பதில்:- நீங்களே தேர்தல் அறிவிக்கவில்லை என்று சொல்லி விட்டீர்கள், தேர்தலை அறிவிக்காமல் எப்படி வேட்பாளரை அறிவிப்பார்கள். நீதிமன்ற உத்தரவு இப்பொழுது தான் வந்திருக்கிறது. இன்றைக்கு கூட்டணிக் கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம், அதில் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிப்போம்.
கேள்வி:- தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தி.மு.க. வழக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறதே?
பதில்:- தோல்வியின் பயத்தில் தி.மு.க. வழக்கு பதிவு செய்திருக்கிறது. ஏற்கனவே 2016-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே வழக்கு தாக்கல் செய்து தேர்தலை நிறுத்தினார்கள். இப்பொழுதும் அந்த முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் சுப்ரீம் கோர்ட் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது. 9 புதிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படையில், அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து, உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


