எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர் : கர்நாடக மாநிலத்தில் 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆட்சியை தக்க வைத்துள்ளார் முதல்வர் எடியூரப்பா.
குமாரசாமி முதல்வரானார்
கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தனி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதீய ஜனதா-105, காங்கிரஸ்-78, மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தது. முதல்வர் பதவியையும் விட்டுக் கொடுத்தது. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி முதல்வரானார்.
ஆட்சி கவிழ்ந்தது
ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்த இடையூறுகளால் குமாரசாமியால் நிம்மதியாக ஆட்சி நடத்த இயலவில்லை. இந்த நிலையில் குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் கடந்த ஜூலை மாதம் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது. அதோடு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணியும் உடைந்தது.
எடியூரப்பா முதல்வரானார்
இதையடுத்து கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 105 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். பதவி விலகிய 17 பேரும் எடியூரப்பாவுக்கு ஆதரவளித்தனர்.
இந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி அத்தானி, காக்வாட், கோகாக், எல்லா புரா, ஹுரேகேரூர், ரானி பென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஹொஸ்கேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.
வாக்கு எண்ணிக்கை
இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக 11 இடங்களில் ஓட்டு எண்ணும் மையங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 8.15 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி இருந்த வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 8.30 மணிக்கு முன்னிலை நில வரம் தெரியத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றனர். அடுத்தடுத்து சுற்றுக்களின் போது பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து கர்நாடகா மாநில பா.ஜ.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வினியோகித்தும் இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடினார்கள். ஓட்டு எண்ணிக்கை நடந்த 15 சட்டமன்ற தொகுதிகளில் 12 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றியது.
ஆட்சியை தக்கவைத்த எடியூரப்பா
15 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் பாரதீய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதனால் மூன்று கட்சிகளும் 15 தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. இதன் காரணமாக 15 தொகுதிகளிலும் மிக, மிக கடுமையான மும்முனைப் போட்டி இருந்தது. 15 தொகுதிகளில் 6 இடங்களில் வெற்றி பெற்றால் தான் பா.ஜ.க. ஆட்சியையும், முதல்-மந்திரி பதவியையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் 12 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதால் எடியூரப்பாவின் ஆட்சி தப்பி உள்ளது.
மெஜாரிட்டிக்கு 113 எம்.எல். ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் எடியூரப்பாவுக்கு 116 எம்.எல்.ஏ.க்களின் பலம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் மிகச் சிறந்த தீர்ப்பை வழங்கியதற்காக மகிழ்ச்சி அடைவதாக எடியூரப்பா கூறி உள்ளார். இப்போது எந்த பிரச்சனையும் இல்லாமல், மக்கள் சார்பு மற்றும் நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
கரூர் நெரிசல்: மத்திய அரசின் ரூ.2 லட்சம் நிதி பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது
25 Oct 2025கரூர்: தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் செப்.27 இல் கரூா் நகரில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 போ் பலியானவர்களின் குடும்பத்தி
-
ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிக்க அமெரிக்காவுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
25 Oct 2025ரஷ்யா: ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
-
சாதனையை சமன் செய்த ராணா
25 Oct 2025ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3-வது மற்றும் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் நேற்று மோதியது.
-
காசா ஒப்பந்தம் தொடர்பான அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு - ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி
25 Oct 2025நியூயார்க்: அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு ஐ.நா. கூட்டத்தில் இந்தியா உறுதி அளித்தது.
-
ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
25 Oct 2025கோவை: ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் 45 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
25 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 45,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
வங்கியில் லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் புதிய விதி அமல்
25 Oct 2025சென்னை: வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதி அமல் படுத்தப்பட உள்ளது.
-
11 ஆண்டுகளில் இந்தியாவில் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து 819 ஆக அதிகரித்துள்ளது மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேச்சு
25 Oct 2025புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-ல் இருந்து 819 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
-
வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு
25 Oct 2025சென்னை: வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் நேரில் ஆய்வு நடத்தினர்.
-
3-வது ஒருநாள் போட்டியில் ரோகித், விராட் கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சி: கேப்டன் சுப்மன்
25 Oct 2025சிட்னி: கோலி பேட்டிங்கை பார்த்தது மகிழ்ச்சியாக இருந்ததாக கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெற்றி...
-
ஆதாயத்திற்காக செயல்படாது தி.மு.க.: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
25 Oct 2025காஞ்சிபுரம்: தி.மு.க.
-
ரோகித் - கோலி அபாரம்: கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி
25 Oct 2025சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
பீல்டிங்கின்போது ஸ்ரேயாஸ் காயம்
25 Oct 2025மும்பை: ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அற்புதமாக பிடித்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஸ்ரேயாஸ் அய்யருக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச


