முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை: அமித்ஷா

செவ்வாய்க்கிழமை, 10 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : 370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் அமித்ஷா தெரிவித்தார்.

உன்னாவ் பெண் கற்பழித்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் நேற்று காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காஷ்மீரில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:-

காஷ்மீரில் தலைவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை. உள்ளூர் நிர்வாகம் அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும்.370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவமும் நடைபெற வில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை. அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது. 99.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து