முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயல் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை தாக்கிய 'உர்சுலா’ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 - ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை ' உர்சுலா’ என்ற அசுரப்புயல் மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது. மின் கம்பங்கள் மற்றும் மரங்களை சாய்த்தபடி காற்று சுழன்று அடித்தது. வீடுகளின் கூரைகள் பறந்தன. புயல் காற்றினால் கடலோரப் பகுதிகள் பெரும் பாதிப்படைந்தன. புயலுக்குப் பின் தொடர்ந்த கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் வசித்துவந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வரை புயல் தாக்கியதில் பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆக இருந்தது.

இந்நிலையில், வெள்ளம் வடிந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் உர்சுலா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 12 பேர் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து