எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : இந்திய விடுதலை வரலாற்றில் எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் நேதாஜி என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை ராஜ்பவனில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது,
புண்ணியம் மிக்க இந்த பாரத மண்ணில் எத்தனையோ மாமனிதர்கள் பிறந்திருக்கிறார்கள் அவர்களில் சிலர் புனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். சிலர் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள், சிலர் விடுதலைப் போராளிகளாக உருவாகி, புதிய இந்தியா மலரப் பாடுபட்டிருக்கிறார்கள். பாரதத்தாயின் அந்த வீரப்புதல்வர்கள், நீடித்த புகழோடு, மக்கள் மனதிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் வங்கம் தந்த சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய மக்களின் இதயங்களில் நீங்கா நிலை கொண்டு இன்றைக்கும் மின்னி மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பூட்டிய அடிமை விலங்கை உடைத்து, அன்னை இந்தியாவை விடுவிப்பதற்காக, தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல், உலகம் முழுவதும் பயணம் செய்து, முதன் முதலாக இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி. அவரது பெயரைக் கேட்டவுடனே ஆங்கிலேயர்களின் அடிமனதில் அச்சம் வருகின்ற அளவிற்கு, துணிச்சலாக செயலாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இளைஞர்களின் இரத்த நாளங்களில் நாட்டுப் பற்றை ஊட்டக்கூடிய உணர்ச்சிகரமான பேச்சு, விடுதலை வேட்கையை தூண்டுகிற வீர முழக்கங்கள் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான வேள்வித் தீயை வளர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தினால் வெகுண்டெழுந்த புரட்சி வீரர் நேதாஜி, தன் தாய்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் பணியாற்றக்கூடாது, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராட வேண்டுமென்று முடிவு செய்து, அதற்காகவே, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஐ.சி.எஸ். தேர்வில் இந்திய அளவில் நான்காமிடம் பெற்று தேர்ச்சி அடைந்தபோதும், அதனை துச்சமாக எண்ணி தூக்கி எறிந்த துணிச்சல் மிக்க தீரர் நேதாஜி.
உலகத்தையே கதிகலங்க வைத்தவர் சர்வாதிகாரி முசோலினி. ஒரு முறை அவரிடம், நேதாஜி எப்படிப்பட்டவர் என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு, நேதாஜி இந்தியாவில் காலம் தவறி பிறந்து விட்டார். அவர் சரியான நேரத்தில் பிறந்திருந்தால், உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் கூட இடம் கிடைத்திருக்காது. அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி என்று முசோலினி கூறினாராம். நேதாஜி அவர்களது வீரத்திற்கு இதுவே மிக பெரிய சான்று.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அலுவலகங்களிலும், ராணுவத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிற வீர முழக்கச் சொல்லான 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தைக்கு முதன்முதலில் உயிர் கொடுத்தவர் நேதாஜி. இந்திய விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் நல்ல நட்புறவோடு இருந்து, பசும்பொன் தேவரை நேசித்து வாழ்ந்த வீரத்திருமகன் ஆவார்.
தன்னுடைய கடைசி மூச்சிருக்கும் வரை, தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், தனக்காக வாழாமல் இந்திய சுதந்திரத்தை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த உத்தம சீலரான நேதாஜியின் தியாகத்தை, வீரத்தை நாமும், நமது வருங்காலத் தலைமுறையினரும், என்றென்றும் நினைவு கூர்ந்திடும் வகையில் அவரது திருவுருவச் சிலை, துணை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஆத்திச்சூடி அருளிய ஒளவைப் பிராட்டியார், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், பண்டித ஜவஹர்லால் நேரு, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திர பிரசாத், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மூதறிஞர் ராஜாஜி, மௌலானா அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட பல பெரியோர்களின் திருவுருவச் சிலைகளுடன் அழகு மிளிரும் நேதாஜியின் வீரத் திருவுருவச் சிலையும் மேலும் பெருமை சேர்க்க உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், இந்திய தேசிய ராணுவத்திற்கு, தான் இறுதியாக ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடக்கூடாது என்று வீர முழக்கமிட்டார். அவரது உரையை இதயத்தில் ஏற்றி, இளைய தலைமுறையின் சக்தியை ஒன்று திரட்டி உழைப்போம். இந்தியாவை உலகின் முதல் நாடாக, எங்கும் நிமிர்ந்து நிற்கும் வல்லரசாக மாற்றிட, பிரதமர் மோடி மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வெற்றிப் பாதையில் பயணிப்போம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டில், பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திராவின் தலைவர் என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை தலைவர் திரிபாதி, முன்னாள் எம்.பி. இல. கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்று தீபாவளி பண்டிகை: எண்ணெய் குளியல் எடுக்க உகந்த நேரம்!
19 Oct 2025சென்னை, தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் (நல்லெண்ணெய் குளியல்) செய்ய உகந்த நேரம் எது என்பகு குறித்த தகவலை பார்ப்போம்.
-
இன்று தீபாவளி பண்டிகை: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
வைகை அணை நீர்மட்டம் உயர்வு: ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 Oct 2025ஆண்டிப்பட்டி : வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய
-
கம்பி கட்ன கதை திரை விமர்சனம்
19 Oct 2025மக்களை ஏமாற்றி வைரத்தை கொள்ளயடிக்க துடிக்கும் ஒரு போலிச் சாமியாரின் கதை தான் கம்பி கட்ன கதை படத்தின் கதை. நாயகன் நட்டி, பல கோடி மதிப்புள்ள கடத்தல் வைரம் ஒன்றை கைப
-
பயம் உன்னை விடாது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
19 Oct 2025எஸ்.கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் பயம் உன்னை விடாது.
-
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம்
19 Oct 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
-
டீசல் திரை விமர்சனம்
19 Oct 2025ராட்சத குழாய் அமைத்து மக்களை விரட்டும் சதிகார கும்பலிடம் இருந்து மக்களையும் மன்னையும் காக்கும் ஒரு வீரனின் கதைதான் டீசல்.
-
சென்னையில் இருந்து புறப்பட்ட பெங்களூர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு
19 Oct 2025சென்னை, சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று காலை 10.45 மணிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
-
நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது
19 Oct 2025மேட்டூர் : வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் கடந்த சில நாட்களாக நீரவரத்து அதிகரித்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.
-
சித்து நடிக்கும் தி டார்க் ஹெவன்
19 Oct 2025கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேக்டரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் தி டார்க் ஹெவன்.
-
மாதாந்திர பூஜைக்காக நடைதிறப்பு: சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்
19 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
-
தீபாவளி கொண்டாட்டம்: பட்டாசு வெடிக்கும்போது நாம் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்
19 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இனிப்பும், பட்டாசும் தான்.
-
பாகிஸ்தானும் - ஆப்கானிஸ்தானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு
19 Oct 2025தோஹா : பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடியார் பின்னால் மக்கள் சக்தியுள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
19 Oct 2025மதுரை, எடப்பாடி பழனிசாமி பின்னால் மக்கள் சக்தியுள்ளது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.
-
டியூட் திரை விமர்சனம்
19 Oct 2025தொடர் வெற்றிகளை குவித்த நாயனுக்கு சற்று சறுக்கல் கொடுத்துள்ள படம் டியூட். ப்ரதீப் ரங்கநாதன், மமிதா சர்ப்ரைஸ் ஈவண்ட் செய்யும் டியூட் என்ற கம்பெனியை நடத்தி வருகின்றனர்.
-
விருதுகளில் நம்பிக்கை இல்லை: நடிகர் விஷால்
19 Oct 2025சென்னை, எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம்.
-
2,400 அடி உயரத்திற்கு வெடித்து சிதறியது கிளாவியா எரிமலை..!
19 Oct 2025ஹவாய், கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வரும் நிலையில், தற்போது 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
-
பைசன் திரை விமர்சனம்
19 Oct 2025சர்வதேச கபடி போட்டியில் களம் கண்ட ஒரு சாதாரான கபடி வீரரின் வலி மிகுந்த கடந்து வந்த பாதைதான் பைசன் படக் கதை.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவு
19 Oct 2025சென்னை : தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
-
2026 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களமிறங்க நெதன்யாகு திட்டம்
19 Oct 2025டெல்அவீவ், இஸ்ரேலில் 2026-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளராக களமிறங்க அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை(அக்.
-
வாடிக்கையாளர் ஆய்வறிக்கை: உலகளவில் சென்னை மெட்ரோ முதலிடம்
19 Oct 2025சென்னை, அக். 20- உலகம் முழுவதும் உள்ள 32 மெட்ரோ நிறுவன வாடிக்கையாளர் ஆய்வறிக்கையில் சென்னை மெட்ரோ முதலிடம் பிடித்துள்ளது.
-
போராட்டக்காரர்கள் மீது வீசப்பட்ட கழிவுகள்: ட்ரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 Oct 2025நியூயார்க், அமெரிக்காவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது விமானத்தில் இருந்து கழிவுகளை வீசி அவமானப்படுத்துவது போல அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செய்யறிவு வீடியோ
-
'பிரதமர் பள்ளிக் கூடங்கள்' திட்டத்தில் இணைகிறது கேரளா: அமைச்சர் தகவல்
19 Oct 2025திருவனந்தபுரம் : பிரதமர் பள்ளிக் கூடங்கள் திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
சேலம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு நா.த.க. வேட்பாளர்களை அறிவித்தார் சீமான் : மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி
19 Oct 2025மேட்டூர் : சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
-
மலைப்பாதையில் பாறை சரிவு: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
19 Oct 2025திருப்பதி, தொடர் விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருப்பதி கோவிலுக்கு அதிக அளவில் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் திருப்பதி மலைப்பாதையில்