எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்திய விடுதலை வரலாற்றில் எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் நேதாஜி என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை ராஜ்பவனில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது,
புண்ணியம் மிக்க இந்த பாரத மண்ணில் எத்தனையோ மாமனிதர்கள் பிறந்திருக்கிறார்கள் அவர்களில் சிலர் புனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். சிலர் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள், சிலர் விடுதலைப் போராளிகளாக உருவாகி, புதிய இந்தியா மலரப் பாடுபட்டிருக்கிறார்கள். பாரதத்தாயின் அந்த வீரப்புதல்வர்கள், நீடித்த புகழோடு, மக்கள் மனதிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் வங்கம் தந்த சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய மக்களின் இதயங்களில் நீங்கா நிலை கொண்டு இன்றைக்கும் மின்னி மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பூட்டிய அடிமை விலங்கை உடைத்து, அன்னை இந்தியாவை விடுவிப்பதற்காக, தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல், உலகம் முழுவதும் பயணம் செய்து, முதன் முதலாக இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி. அவரது பெயரைக் கேட்டவுடனே ஆங்கிலேயர்களின் அடிமனதில் அச்சம் வருகின்ற அளவிற்கு, துணிச்சலாக செயலாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இளைஞர்களின் இரத்த நாளங்களில் நாட்டுப் பற்றை ஊட்டக்கூடிய உணர்ச்சிகரமான பேச்சு, விடுதலை வேட்கையை தூண்டுகிற வீர முழக்கங்கள் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான வேள்வித் தீயை வளர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தினால் வெகுண்டெழுந்த புரட்சி வீரர் நேதாஜி, தன் தாய்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் பணியாற்றக்கூடாது, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராட வேண்டுமென்று முடிவு செய்து, அதற்காகவே, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஐ.சி.எஸ். தேர்வில் இந்திய அளவில் நான்காமிடம் பெற்று தேர்ச்சி அடைந்தபோதும், அதனை துச்சமாக எண்ணி தூக்கி எறிந்த துணிச்சல் மிக்க தீரர் நேதாஜி.
உலகத்தையே கதிகலங்க வைத்தவர் சர்வாதிகாரி முசோலினி. ஒரு முறை அவரிடம், நேதாஜி எப்படிப்பட்டவர் என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு, நேதாஜி இந்தியாவில் காலம் தவறி பிறந்து விட்டார். அவர் சரியான நேரத்தில் பிறந்திருந்தால், உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் கூட இடம் கிடைத்திருக்காது. அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி என்று முசோலினி கூறினாராம். நேதாஜி அவர்களது வீரத்திற்கு இதுவே மிக பெரிய சான்று.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அலுவலகங்களிலும், ராணுவத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிற வீர முழக்கச் சொல்லான 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தைக்கு முதன்முதலில் உயிர் கொடுத்தவர் நேதாஜி. இந்திய விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் நல்ல நட்புறவோடு இருந்து, பசும்பொன் தேவரை நேசித்து வாழ்ந்த வீரத்திருமகன் ஆவார்.
தன்னுடைய கடைசி மூச்சிருக்கும் வரை, தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், தனக்காக வாழாமல் இந்திய சுதந்திரத்தை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த உத்தம சீலரான நேதாஜியின் தியாகத்தை, வீரத்தை நாமும், நமது வருங்காலத் தலைமுறையினரும், என்றென்றும் நினைவு கூர்ந்திடும் வகையில் அவரது திருவுருவச் சிலை, துணை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஆத்திச்சூடி அருளிய ஒளவைப் பிராட்டியார், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், பண்டித ஜவஹர்லால் நேரு, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திர பிரசாத், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மூதறிஞர் ராஜாஜி, மௌலானா அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட பல பெரியோர்களின் திருவுருவச் சிலைகளுடன் அழகு மிளிரும் நேதாஜியின் வீரத் திருவுருவச் சிலையும் மேலும் பெருமை சேர்க்க உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், இந்திய தேசிய ராணுவத்திற்கு, தான் இறுதியாக ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடக்கூடாது என்று வீர முழக்கமிட்டார். அவரது உரையை இதயத்தில் ஏற்றி, இளைய தலைமுறையின் சக்தியை ஒன்று திரட்டி உழைப்போம். இந்தியாவை உலகின் முதல் நாடாக, எங்கும் நிமிர்ந்து நிற்கும் வல்லரசாக மாற்றிட, பிரதமர் மோடி மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வெற்றிப் பாதையில் பயணிப்போம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டில், பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திராவின் தலைவர் என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை தலைவர் திரிபாதி, முன்னாள் எம்.பி. இல. கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.