எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்திய விடுதலை வரலாற்றில் எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் நேதாஜி என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை ராஜ்பவனில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது,
புண்ணியம் மிக்க இந்த பாரத மண்ணில் எத்தனையோ மாமனிதர்கள் பிறந்திருக்கிறார்கள் அவர்களில் சிலர் புனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். சிலர் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள், சிலர் விடுதலைப் போராளிகளாக உருவாகி, புதிய இந்தியா மலரப் பாடுபட்டிருக்கிறார்கள். பாரதத்தாயின் அந்த வீரப்புதல்வர்கள், நீடித்த புகழோடு, மக்கள் மனதிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் வங்கம் தந்த சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய மக்களின் இதயங்களில் நீங்கா நிலை கொண்டு இன்றைக்கும் மின்னி மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பூட்டிய அடிமை விலங்கை உடைத்து, அன்னை இந்தியாவை விடுவிப்பதற்காக, தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல், உலகம் முழுவதும் பயணம் செய்து, முதன் முதலாக இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி. அவரது பெயரைக் கேட்டவுடனே ஆங்கிலேயர்களின் அடிமனதில் அச்சம் வருகின்ற அளவிற்கு, துணிச்சலாக செயலாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இளைஞர்களின் இரத்த நாளங்களில் நாட்டுப் பற்றை ஊட்டக்கூடிய உணர்ச்சிகரமான பேச்சு, விடுதலை வேட்கையை தூண்டுகிற வீர முழக்கங்கள் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான வேள்வித் தீயை வளர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தினால் வெகுண்டெழுந்த புரட்சி வீரர் நேதாஜி, தன் தாய்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் பணியாற்றக்கூடாது, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராட வேண்டுமென்று முடிவு செய்து, அதற்காகவே, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஐ.சி.எஸ். தேர்வில் இந்திய அளவில் நான்காமிடம் பெற்று தேர்ச்சி அடைந்தபோதும், அதனை துச்சமாக எண்ணி தூக்கி எறிந்த துணிச்சல் மிக்க தீரர் நேதாஜி.
உலகத்தையே கதிகலங்க வைத்தவர் சர்வாதிகாரி முசோலினி. ஒரு முறை அவரிடம், நேதாஜி எப்படிப்பட்டவர் என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு, நேதாஜி இந்தியாவில் காலம் தவறி பிறந்து விட்டார். அவர் சரியான நேரத்தில் பிறந்திருந்தால், உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் கூட இடம் கிடைத்திருக்காது. அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி என்று முசோலினி கூறினாராம். நேதாஜி அவர்களது வீரத்திற்கு இதுவே மிக பெரிய சான்று.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அலுவலகங்களிலும், ராணுவத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிற வீர முழக்கச் சொல்லான 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தைக்கு முதன்முதலில் உயிர் கொடுத்தவர் நேதாஜி. இந்திய விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் நல்ல நட்புறவோடு இருந்து, பசும்பொன் தேவரை நேசித்து வாழ்ந்த வீரத்திருமகன் ஆவார்.
தன்னுடைய கடைசி மூச்சிருக்கும் வரை, தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், தனக்காக வாழாமல் இந்திய சுதந்திரத்தை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த உத்தம சீலரான நேதாஜியின் தியாகத்தை, வீரத்தை நாமும், நமது வருங்காலத் தலைமுறையினரும், என்றென்றும் நினைவு கூர்ந்திடும் வகையில் அவரது திருவுருவச் சிலை, துணை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஆத்திச்சூடி அருளிய ஒளவைப் பிராட்டியார், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், பண்டித ஜவஹர்லால் நேரு, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திர பிரசாத், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மூதறிஞர் ராஜாஜி, மௌலானா அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட பல பெரியோர்களின் திருவுருவச் சிலைகளுடன் அழகு மிளிரும் நேதாஜியின் வீரத் திருவுருவச் சிலையும் மேலும் பெருமை சேர்க்க உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், இந்திய தேசிய ராணுவத்திற்கு, தான் இறுதியாக ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடக்கூடாது என்று வீர முழக்கமிட்டார். அவரது உரையை இதயத்தில் ஏற்றி, இளைய தலைமுறையின் சக்தியை ஒன்று திரட்டி உழைப்போம். இந்தியாவை உலகின் முதல் நாடாக, எங்கும் நிமிர்ந்து நிற்கும் வல்லரசாக மாற்றிட, பிரதமர் மோடி மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வெற்றிப் பாதையில் பயணிப்போம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டில், பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திராவின் தலைவர் என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை தலைவர் திரிபாதி, முன்னாள் எம்.பி. இல. கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி விஜய் மீது அமைச்சர் ரகுபதி விமர்சனம்
20 Dec 2025சென்னை, ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வராவது எல்லாம் சினிமாவில் நடக்கும், அரசியலில் உண்மையில் நடக்காது என விஜய்யை விமர்சித்துள்ள அமைச்சர் ரகுபதி, நாங்கள் தீய சக்தி இல்லை
-
கீழடி, நம் தாய்மடி - பொருநை, தமிழரின் பெருமை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு பெருமிதம்
20 Dec 2025சென்னை, நம்முடைய பெருமையையும் வரலாற்றையும் நாம் முதலில் தெரிந்து கொண்டால் தான், உலகத்திற்கு அதை எடுத்துச் சொல்ல முடியும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
20 Dec 2025ஆமதாபாத், எஸ்.ஐ.ஆர்-க்கு பிறகு குஜராத் மாநிலத்தில் 73.73 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
-
அசாமில் ரயில் மோதி 8 யானைகள் பலி
20 Dec 2025கவுகாத்தி, அசாமில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 8 யானைகள் உயிரிழந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நாகூர் இ.எம்.ஹனீபா நினைவு மலர்: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்
20 Dec 2025சென்னை, நாகூர் இ.எம்.ஹனீபா நூற்றாண்டு நினைவு மலரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


