எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : இந்திய விடுதலை வரலாற்றில் எண்ணற்ற பெருமைகளுக்கு சொந்தக்காரர் நேதாஜி என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை ராஜ்பவனில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது,
புண்ணியம் மிக்க இந்த பாரத மண்ணில் எத்தனையோ மாமனிதர்கள் பிறந்திருக்கிறார்கள் அவர்களில் சிலர் புனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். சிலர் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். சிலர் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள், சிலர் விடுதலைப் போராளிகளாக உருவாகி, புதிய இந்தியா மலரப் பாடுபட்டிருக்கிறார்கள். பாரதத்தாயின் அந்த வீரப்புதல்வர்கள், நீடித்த புகழோடு, மக்கள் மனதிலே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் வங்கம் தந்த சிங்கமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய மக்களின் இதயங்களில் நீங்கா நிலை கொண்டு இன்றைக்கும் மின்னி மிளிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பூட்டிய அடிமை விலங்கை உடைத்து, அன்னை இந்தியாவை விடுவிப்பதற்காக, தன் உயிரை ஒரு பொருட்டாக மதிக்காமல், உலகம் முழுவதும் பயணம் செய்து, முதன் முதலாக இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி. அவரது பெயரைக் கேட்டவுடனே ஆங்கிலேயர்களின் அடிமனதில் அச்சம் வருகின்ற அளவிற்கு, துணிச்சலாக செயலாற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இளைஞர்களின் இரத்த நாளங்களில் நாட்டுப் பற்றை ஊட்டக்கூடிய உணர்ச்சிகரமான பேச்சு, விடுதலை வேட்கையை தூண்டுகிற வீர முழக்கங்கள் மூலம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான வேள்வித் தீயை வளர்த்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தினால் வெகுண்டெழுந்த புரட்சி வீரர் நேதாஜி, தன் தாய்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் பணியாற்றக்கூடாது, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக போராட வேண்டுமென்று முடிவு செய்து, அதற்காகவே, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான ஐ.சி.எஸ். தேர்வில் இந்திய அளவில் நான்காமிடம் பெற்று தேர்ச்சி அடைந்தபோதும், அதனை துச்சமாக எண்ணி தூக்கி எறிந்த துணிச்சல் மிக்க தீரர் நேதாஜி.
உலகத்தையே கதிகலங்க வைத்தவர் சர்வாதிகாரி முசோலினி. ஒரு முறை அவரிடம், நேதாஜி எப்படிப்பட்டவர் என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு, நேதாஜி இந்தியாவில் காலம் தவறி பிறந்து விட்டார். அவர் சரியான நேரத்தில் பிறந்திருந்தால், உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும், நெப்போலியனுக்கும் கூட இடம் கிடைத்திருக்காது. அப்படிப்பட்ட மாவீரன் நேதாஜி என்று முசோலினி கூறினாராம். நேதாஜி அவர்களது வீரத்திற்கு இதுவே மிக பெரிய சான்று.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அலுவலகங்களிலும், ராணுவத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிற வீர முழக்கச் சொல்லான 'ஜெய் ஹிந்த்' என்ற வார்த்தைக்கு முதன்முதலில் உயிர் கொடுத்தவர் நேதாஜி. இந்திய விடுதலை வரலாற்றில் இடம் பெற்ற எண்ணற்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரரான நேதாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் நல்ல நட்புறவோடு இருந்து, பசும்பொன் தேவரை நேசித்து வாழ்ந்த வீரத்திருமகன் ஆவார்.
தன்னுடைய கடைசி மூச்சிருக்கும் வரை, தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், தனக்காக வாழாமல் இந்திய சுதந்திரத்தை மட்டுமே நினைத்துக்கொண்டிருந்த உத்தம சீலரான நேதாஜியின் தியாகத்தை, வீரத்தை நாமும், நமது வருங்காலத் தலைமுறையினரும், என்றென்றும் நினைவு கூர்ந்திடும் வகையில் அவரது திருவுருவச் சிலை, துணை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், ஆத்திச்சூடி அருளிய ஒளவைப் பிராட்டியார், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், பண்டித ஜவஹர்லால் நேரு, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் இராஜேந்திர பிரசாத், டாக்டர் இராதாகிருஷ்ணன், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மூதறிஞர் ராஜாஜி, மௌலானா அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட பல பெரியோர்களின் திருவுருவச் சிலைகளுடன் அழகு மிளிரும் நேதாஜியின் வீரத் திருவுருவச் சிலையும் மேலும் பெருமை சேர்க்க உள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், இந்திய தேசிய ராணுவத்திற்கு, தான் இறுதியாக ஆற்றிய உரையில், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடக்கூடாது என்று வீர முழக்கமிட்டார். அவரது உரையை இதயத்தில் ஏற்றி, இளைய தலைமுறையின் சக்தியை ஒன்று திரட்டி உழைப்போம். இந்தியாவை உலகின் முதல் நாடாக, எங்கும் நிமிர்ந்து நிற்கும் வல்லரசாக மாற்றிட, பிரதமர் மோடி மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, வெற்றிப் பாதையில் பயணிப்போம். இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபை சபாநாயகர் தனபால் மற்றும் கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் வி.பாட்டில், பாரதிய வித்யா பவன் சென்னை கேந்திராவின் தலைவர் என்.ரவி, இயக்குநர் கே.என்.ராமசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், பென்ஜமின், பாண்டியராஜன், தலைமை செயலாளர் சண்முகம், காவல் துறை தலைவர் திரிபாதி, முன்னாள் எம்.பி. இல. கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
கிருஷ்ணகிரி அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: 4 பேர் பலி
20 Jul 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்
20 Jul 2025ரோம் : ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியது.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல் அருவியில் குளிக்க பரிசல் இயக்கவும் மீண்டும் தடை
20 Jul 2025தருமபுரி : ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jul 2025திருச்செந்தூர் : ஆடி கிருத்திகையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
முதற்கட்ட பயணம் வெற்றி: தமிழக மக்களுக்கு இ.பி.எஸ். நன்றி
20 Jul 2025சென்னை : "மக்களை காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்ற எனது முதற்கட்ட பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி என்று அ.தி.மு.க.
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தாமதமாக இயக்கம்
20 Jul 2025சென்னை : சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.