எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 83 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளையும், திருச்சி மற்றும் தஞ்சாவூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 103 பேருந்துகளும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 25 பேருந்துகளும், சேலம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு10 பேருந்துகளும், கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 20 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 35 பேருந்துகளும், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 5 பேருந்துகளும் என மொத்தம் ரூபாய் 83 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பணிமனை வாகனங்கள்
2018-19ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில், அரசு தானியங்கி பணிமனை இல்லாத மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு துறை ஊர்திகள் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனை தவிர்த்திடும் பொருட்டு தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அம்மா அரசு நடமாடும் பணிமனை முன்னோட்ட அடிப்படையில் இரண்டு மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை சார்பில் முதற்கட்டமாக, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டிற்காக ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
முன்பதிவு செய்ய செயலி
அவசர வேலை காரணமாக உடனடியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செல்லிடைப் பேசி தனிச்செயலி வழி முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.
பணி நியமன ஆணை
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களில், 36 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநனராகவும் 188 வாரிசுதாரர்களுக்கு நடத்துனராகவும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.
மேலும், அரசு போக்குவரத்து கழகங்களில் 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணிநியமனம் செய்யப்பட்ட 1,828 சேம ஓட்டுநர்கள் மற்றும் 537 சேம நடத்துனர்களில், தகுதி பெற்ற 1,112 ஓட்டுநர்கள் மற்றும் 162 நடத்துனர்களுக்கு தினக்கூலி ஓட்டுநர் மற்றும் தினக்கூலி நடத்துனர்களாக பதவி மாற்றம் செய்வதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 சேம ஓட்டுநர்கள் மற்றும் சேம நடத்துனர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி. சந்தர மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் இளங்கோவன், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கணேசன், மோட்டார் வாகன பராமரிப்புத் துறை இயக்குநர் செந்தில்வேலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கும் காலம் நிறைவு
19 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கலில் புதிய ரூட்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் எதிரிகளுக்கு நமது வலிமையை காட்டினோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
19 Sep 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-
குஜராத் விமான விபத்து: முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக வழக்கு
19 Sep 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்தின் முழு தரவுகளை வெளியிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.