முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பிரசாரத்தில் ஆட்சேப பேச்சு: பிரதமர் மோடிக்கு 170 பெண் பிரமுகர்கள் கடிதம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2020      அரசியல்
Image Unavailable

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது மோசமாக பேசியதாக பல்வேறு துறை பெண் பிரபலங்கள் 170 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் காட்டமாக பேசி வருகின்றன. இதில், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களும், பல்வேறு ஆட்சேபகரமான கருத்துக்களை பேசி வருகிறார்கள். இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த பல்வேறு துறை பெண் பிரபலங்கள் 170 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். பொருளாதார நிபுணர் தேவகி ஜெயின், முன்னாள் வெளிநாட்டு தூதர்கள் மதுபாதுரி, நவ்ரேகா சர்மா, பேராசிரியர் சோயா ஹசன், வரலாற்று நிபுணர் உமா சக்கரவர்த்தி, முன்னாள் திட்டக்குழு உறுப்பினர் சைதா ஹமீது உள்ளிட்டோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். பிரதமராகிய நீங்கள் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பது அரசியல் சட்ட ரீதியான கடமையாகும். இந்த நிலையில் நீங்களும், உங்களது கட்சியும் அரசியல் சாசன சட்ட விதிகளுக்குட்பட்டு தேர்தலை சந்திக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பெண்களுக்கு பயத்தையும், பாதுகாப்பின்மையையும் அதிகரிக்கும் வகையில் செயல்பட வேண்டாம். பிரதமராகிய நீங்கள் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவராக இருக்கலாம்.

ஆனால், நாட்டின் பிரதமர் என்ற வகையில் அனைத்து மக்களையும் பாதுகாக்க வேண்டியது அரசியல் சாசன ரீதியிலான உரிமையாகும். இது போன்ற வெறுக்கத்தக்க வன்முறையை உருவாக்கும் பேச்சுகளுக்கு எதிராக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் பெண்கள் என்ற வகையிலும், டெல்லியில் வசிப்பவர்கள் என்ற வகையிலும் நாங்கள் உங்களிடம் சொல்கிறோம். நாங்கள் இந்துவாக, முஸ்லிமாக, கிறிஸ்தவர்களாக, சீக்கியர்களாக, ஆதிவாசிகளாக, தலித்துகளாக இருக்கலாம். தேசிய குடியுரிமை சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு போன்றவற்றை எதிர்த்து நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. உங்கள் அரசு இதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், அமைதியாக போராட்டம் நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை. இது போன்றவற்றில் நாங்கள் ஈடுபடுகிறோம். லட்சக்கணக்கான டெல்லி பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுக்கிறார்கள். பெண்கள் ஆளுமையை வெளிக்காட்டும் வகையில் முன்னணியில் இருந்தும் போராடுகிறார்கள். எங்களை தீவிரவாதிகள், துரோகிகள் என்றும் முத்திரை குத்துகிறார்கள். இதற்காக நாங்கள் அமைதியாகஇருக்க முடியாது. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமையின் அடிப்படையில்தான் நாங்கள் போராடுகிறோம். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அனுராக் தாகூர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா ஆகியோரின் பேச்சுக்கள் வெறுக்கத்தக்க வகையில் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து