எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.78 கோடியில் உணவு பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது,
தமிழ்நாட்டிலுள்ள மக்கள்தொகையில் 50 விழுக்காடு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு விவசாயமே முதன்மையான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. விவசாயியை மையமாக கொண்ட அணுகுமுறையை பின்பற்றுவதே கிராமப்புற மக்களின் இல்லாமையை போக்குவதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குமான வழியாகும். வேளாண்மைத் துறையில் முதலீடு செய்வதென்பது உணவுப் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கும் இன்றியமையாததாகும். காவேரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வர் அறிவித்தது,
தமிழக அரசு வேளாண்மைத் துறைக்கு அளித்து வரும் பெரும் முக்கியத்துவத்தையே குறிக்கிறது. நீரை சிக்கனமாக பயன்படுத்தும் திருந்திய நெல் சாகுபடி முறையானது 2020 - 21ம் ஆண்டில் 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும். 11.1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு நேரடி நெல் விதைப்பு முறை, நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்துடன் இணைந்து நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி ஆகியவற்றில் அதிக விளைச்சல் தரும் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
நிலையான கரும்பு உற்பத்திக்கு 2020 - 21ம் ஆண்டில் 12 கோடி ரூபாய் செலவில் 74,132 ஏக்கர் பரப்பளவில், நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டத்தின் தொழில்நுட்பங்களுடன் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். கரும்பு விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க, 2019-20ம் ஆண்டில் 68.35 கோடி ரூபாய் சிறப்பு கூடுதல் நிதியுதவி அனுமதிக்கப்பட்டது. இத்திட்டமானது 75 கோடி ரூபாய் கூடுதல் நிதியுதவியுடன் 2020 - 21ம் ஆண்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாநில அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பரிந்துரை விலைக்கும், மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் நியாயமான மற்றும் ஆதாய விலைக்கும் இடையேயான வேறுபாட்டினை சரி செய்ய, கரும்பு உற்பத்தியாளர்களுக்கு கரும்பு உற்பத்திக்கான உற்பத்தி ஊக்கத்தொகை, 2019-20ம் ஆண்டின் அரவைப்பருவத்திலும் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த நோக்கத்திற்காக 2020-21ம் ஆண்டின் வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 165 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20ம் ஆண்டின் அரவைக்காலத்திற்கு டன் ஒன்றிற்கு 100 ரூபாய் வரை என்ற அளவில் 110 கோடி ரூபாயை போக்குவரத்து மானியமாகவும் இந்த அரசு வழங்கும். இத்தகைய நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தித் தொழில் புத்துயிர் பெற உதவும்.சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பண்ணைய முறை, தற்போது 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு, 2020 - 21ம் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. கூட்டுப்பண்ணைய முறையின் தொடர் முயற்சியாக, சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டுகளில் ஆறு லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஏற்கெனவே 75 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்பொழுது, 45 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 2019-20ம் ஆண்டு வரவு–செலவுத் திட்ட அறிக்கையில் அறிவித்தவாறு, அரசு, ‘தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புக் கொள்கை’யினை வெளியிட்டுள்ளது. 2020 - 21ம் ஆண்டில் வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100.56 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 2016-17ம் ஆண்டிலிருந்து 2019-20ம் ஆண்டு வரையில், 25 லட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்கள், நிலைக்கத்தக்க மானாவாரி வேளாண்மை இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி இயக்கத்தை, நிலத் தொகுப்பு அடிப்படையில் மறுசீரமைப்பு செய்வதன் மூலம், ஒவ்வொன்றும் 250 ஏக்கர் கொண்ட 10,000 நிலத் தொகுப்புகள், எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் ‘தமிழ்நாடு நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கத்தின்’ கீழ் மேம்படுத்தப்படும்.
2020 - 21ம் ஆண்டில், 180 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 7.5 லட்சம் ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 3,000 நிலத் தொகுப்புகள் பயனடையும்.புவி வெப்பமயமாதல் காரணமாக, சமீபகாலங்களில் அடிக்கடி பூச்சித் தாக்குதல்கள் ஏற்பட்டு வருகிறது. 2019-20ம் ஆண்டில், 47.66 கோடி ரூபாய் செலவில் அரசால் எடுக்கப்பட்ட சீரிய முயற்சிகளால் தமிழ்நாட்டில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதல் திறம்பட கட்டுப்படுத்தப்பட்டது. அமெரிக்க படைப்புழுத் தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக 5 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, 2020 - 21ம் ஆண்டில் 20 கோடி ரூபாயில் பூச்சி மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடப்பு ரபி பருவத்தில், நெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ மற்றும் புகையான் பூச்சித் தாக்குதலும், தென்னையில் ‘ரூகோஸ் சுழல் வெள்ளை ஈ’ தாக்குதலும் உடனடியாகக் கண்டறியப்பட்டு, அவற்றின் பரவுதலைக் தடுக்கவும், தேவை ஏற்படின், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் துறையில் விரிவாக்கப் பணிகளை வலுப்படுத்த, குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வலுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரி வருகின்றனர். ஏற்கெனவே உள்ள அலுவலர்களை தக்க முறையில் பயன்படுத்தி, வேளாண் நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள், துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பெறுவதற்கு, ‘உழவர்–அலுவலர் தொடர்புத் திட்டத்தை’ அரசு அறிமுகம் செய்யும். வேளாண் துறை அதிகாரிகள் விளை நிலங்களுக்கே சென்று விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனைகளை வழங்குவதுடன், தகவல் தொழில்நுட்ப உத்திகளும் இதன் பொருட்டு பயன்படுத்தப்படும். பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு, மகத்தான வெற்றி கண்டு வருகிறது.
இது வரையில், இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 36.44 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 7,618 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மாநில அரசின் பங்குத் தொகைக்காக, 724.14 கோடி ரூபாய் என்ற உயர்த்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுடன், 2020 - 21ம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். நுண்ணீர்ப் பாசனத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு கடந்த 2 ஆண்டுகளாக முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. கடந்த 2018-19ம் ஆண்டில், தமிழ்நாட்டில் 700.69 கோடி ரூபாய் செலவில் 3.51 லட்சம் ஏக்கர் நிலம் நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 2019-20ம் ஆண்டில் 5.63 லட்சம் ஏக்கர் நிலங்கள் 1,370.24 கோடி ரூபாய் செலவில் நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. வரும் 2020 -21ம் ஆண்டில் 1,844.97 கோடி ரூபாய் செலவில் 7.41 லட்சம் ஏக்கர் நிலங்கள் நுண்ணீர்ப் பாசன வசதி பெறும். பயன்தரும் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்குவிப்பது விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கவும், மாறிவரும் ஊட்டச்சத்துத் தேவைகளை எதிர் கொள்ளவும் வகை செய்கிறது.
இந்த அரசு, இதற்கான சிறப்பு மையங்களை அமைக்க 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடலூரில் முந்திரி, பெரம்பலூரில் வெங்காயம், தேனியில் முருங்கை, ஈரோட்டில் மஞ்சள், தென்காசியில் எலுமிச்சை மற்றும் தூத்துக்குடியில் மிளகாய் ஆகியவற்றிற்கான மையங்கள் அமைக்க உள்ளது. தோட்டக்கலைப் பயிர் சாகுபடிப் பரப்பை அதிகரிக்க, 2020 - 21ம் ஆண்டில், 325 மெட்ரிக் டன் காய்கறி விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்வதற்கும், பண்ணை செயல்பாடுகளை எளிமையாக்குவதற்கும் வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது மாநிலத்தில், 1,665 வட்டார அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களும், 997 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்களும், 15 கரும்பிற்கான வேளாண் இயந்திர வாடகை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 2020 - 21ம் ஆண்டில், மொத்த நிதி ஒதுக்கீடான, 200 கோடி ரூபாய் மதிப்பில் 100 வட்டார அளவிலான மற்றும் 250 கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும்.
பிரதம மந்திரியின் கிஸான் உர்ஜா சுரக்சா ஏவம் உத்தான் மகா அபியான் திட்டம், 10 குதிரைத் திறன் வரை கொண்ட 17,500 தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை தமிழ்நாட்டில் அமைப்பதற்கு மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகளை 70 சதவீதம் மானியத்துடன் வேளாண் பொறியியல் துறை அமைத்து தரும். வேளாண்மைக்கான மின் இணைப்பிற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு 472.85 கோடி ரூபாய் ஆகும். இதில், தமிழ்நாடு அரசின் பங்கு தொகைக்காக, 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தில் 208.74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாய் செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2020 - 21ம் நிதியாண்டில், பிரதம மந்திரி கிசான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ், 218 கோடி ரூபாய் செலவில், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் நிறுவிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் 70 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். ஒருங்கிணைந்த உழவர் விற்பனை வளாகங்கள் திருவண்ணாமலை, தருமபுரி, மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 5 இடங்களில் முன்னோடித் திட்ட அடிப்படையில் மொத்தம் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு வேளாண் சந்தை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் நிறுவப்படும். இந்த வளாகங்கள் இடுபொருள் விற்பனையகங்கள், சேவை மையங்கள் மற்றும் பிற விற்பனை நிலையங்கள் போன்ற வசதிகளுடன், விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருதரப்பினரும் பயன்பெறும் வகையில், பொதுவான தளங்களாகச் செயல்படும். 2020 - 21ம் ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.