எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நேற்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். முதல்வர் தாக்கல் செய்த இந்த சட்ட மசோதா நேற்று தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.
முதல்வரின் பதில் உரைக்குப் பின் சட்ட மசோதா சட்டமாக நிறைவேறியது. அப்போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் காவிரி டெல்டா பகுதிகளில் வேளாண் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் தலைவாசலில் நடந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறியிருந்தார். மேலும் விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
நான் ஒரு விவசாயியாக இருந்து இந்த சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த சட்ட முன்வடிவை அவையில் தாக்கல் செய்வதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த வாய்ப்பு இறைவனாக காட்சியளிக்கிற ஜெயலலிதா தந்த பாக்கியமாக நான் கருதுகிறேன். 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் மேம்படுத்தப்பட்ட சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது:-
காவிரி ஆற்றுப்படுகை மண்டலமானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக கருதப்படுகிறது. இது மாநிலத்தில் உணவு தானிய மற்றும் பிற வேளாண் விளைபொருட்களின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பதுடன் மாநிலத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்கிறது. பல்வேறு வகைப்பட்ட வேளாண் நடவடிக்கைகளானது விவசாயிகளுக்கும், பண்ணை தொழிலாளர்களுக்கும் நாகரீகமான வாழ்க்கை தரத்தை உறுதி செய்கிறது. சமீப ஆண்டுகளில் சில வேளாண்மை சாராத நடவடிக்கைகள் இம்மண்டலத்தில் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பை அச்சுறுத்துகிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதுகாக்கும் பொருட்டு சில நடவடிக்கைகளை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக விவசாயிகளின் நலனுக்காக சேவை செய்வதற்கும், பண்ணை உற்பத்தி மற்றும் பண்ணை உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் பண்ணை நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் உயர்மட்ட குழு ஒன்றினை இந்த சட்ட முன்வடிவு அமைக்க விழைகிறது. எந்த ஒரு நபரும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தவொரு புதிய திட்டத்தையோ, புதிய செயல்பாட்டையோ மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. துத்தநாக உருக்கு ஆலை, இரும்பு தாது செயல்முறை ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு ஆலை, செம்பு உருக்கு ஆலை, அலுமினியம் உருக்கு ஆலை, விலங்குகளின் எலும்பு, கொம்பு, குளம்பு மற்றும் பிற உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல், எண்ணை மற்றும் நிலக்கரி படுகை மீத்தேன், மென்களிக்கல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோ கார்பன்கள் உள்ளடங்களான இயற்கை வாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தல், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகை மாவட்டம், கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோயில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமராட்சி வட்டாரங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம், மற்றும் கறம்பக்குடி வட்டாரங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பு என்ற பெயரில் ஒரு அதிகார அமைப்பு இருத்தல் வேண்டும் என்ற அடிப்படையில் முதல்வரை தலைவராகவும், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசு செயலாளர்கள் உள்ளிட்ட 24 பேர் கொண்ட அதிகார அமைப்பு ஒன்று உருவாக்கப்படுகிறது. அதே போல் இந்த அதிகார அமைப்புக்கு உதவுவதற்காக மாவட்ட அளவில் ஒரு குழு இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்பட்ட 2 விவசாயிகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள். வேளாண்மையின் நிலையான வளர்ச்சிக்கு இருக்கிற வேளாண் நிலங்களை பயன்படுத்தவும், மற்றும் வேளாண் அற்ற பயன்பாடு அல்லது பிற வளர்ச்சி தேவையற்ற முறையில் வேளாண் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை என இந்த சட்ட முன்வடிவு தெரிவித்துள்ளது. மேலும் பயிர் மற்றும் பண்கைளின் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் மேம்பட்ட சாகுபடி முறைகள் மூலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மேம்படுத்தவும், வேளாண் துறையில் வெள்ளநீர் மேலாண்மை, பிற இடுபொருட்கள் உள்ளடங்கலான நீரின் உகந்த பயன்பாட்டின் வளர்ச்சிக்காவும் நிலையான வேளாண் மேம்பாட்டிற்காக வேளாண் சார்ந்த மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களை மேம்படுத்தவும், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் திறன் மேம்பாடு உள்ளிட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காகவும் இந்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை செயல்படுத்துவதற்காக வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு குறையாத எந்தவொரு அலுவலரும், இதுதொடர்பாக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட எவரும் அல்லது துணை கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத காவல் அலுவலர் எவரும் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலத்தில் சட்டத்தின் வரைமுறைகளுக்கு முரணான சட்டத்தின் வகை முறைகளில் இணக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என நம்புவதற்கான காரணத்தை கொண்டிருந்தால் அவர் எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து தேடலாம். மற்றும் அத்தகைய செயலுக்காக பயன்படுத்தியதாக கருதப்படும் எந்த ஒரு பொருள், இயந்திரங்கள், உபகணரங்கள் போன்றவற்றையும் கைப்பற்றலாம். மற்றும் அத்தகைய கைப்பற்றுதல் தொடர்பான ஒரு அறிக்கையை நடவடிக்கை தொடங்கப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அத்தகைய கைப்பற்றுகை செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அந்த பகுதியின் அதிகார வரம்பை கொண்டுள்ள மாவட்ட அளவிலான குழுவிற்கு அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் செய்யப்படும் அனைத்து தேடுதல்களும் 1972-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை தொகுப்பு சட்டத்தின் வரைமுறைகளுக்கு இணைங்கிய வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். கைப்பற்றுகை தொடர்பான அறிக்கை பெறப்பட்ட பின் மாவட்ட அளவிலான குழுவானது பொருத்தம் என கருதினால் கைப்பற்றுதல் செய்த பொருட்களை பறிமுதல் செய்ய ஆணையிடலாம். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், குறைந்த பட்சம் ரூ. 10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.50 லட்சம் வரை அபராதமும், தொடர்ச்சியான அத்துமீறல் ஈடுபடுபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ. 50 ஆயிரம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக தமிழக சட்டசபையில் நிறைவேறியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி
18 Sep 2025மே.தீவுகள் அணி அறிவிப்பு
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.