எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பூர் : திருப்பூர் அருகே கேரள அரசு பஸ் - டேங்கர் லாரி மோதிய கோரவிபத்தில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதிகாலையில் நடந்த இந்த பயங்கர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் தற்போது வரை நான்கு பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் மற்றும் கோவை அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவ இடத்திற்குச் நேரில் வந்து பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது:
கேரள அரசு சொகுசு பேருந்தில் 48 பேர் பயணம் செய்து வந்துள்ளனர். விபத்தில் இறந்த, காயமடைந்தவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பேருந்து கேரளா அரசின் சொகுசு பேருந்து என்பதால் பாலக்காடு மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரளாவில் இருந்து ஒரு குழு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தீயணைப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் காவல் துறையும், வருவாய் துறை அலுவலர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்பட்டு கேரளா அரசுக்கு தெரிவித்து அரசு நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்து லாரி டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மேலும் அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து தகவலுக்கு 97466 40662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணையும் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவினாசி கோர விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்ததில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பைக் கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்த ஓட்டுநர் உள்ளிட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்த மீட்பு பணிகளுக்காக கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன், வேளாண் அமைச்சர் சுனில்குமார், ஆலத்தூர் எம்.பி.ஹரிதாஸ், பாலக்காடு எம்.பி.சாபிபரம்பில் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் இறந்த, காயம் அடைந்தவர்கள் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் கேரள முதல்வர் உத்தரவின் பேரில் விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும், மரணமடைந்தவர்களின் உடல்களை கேரளாவுக்கு கொண்டு வர 20 ஆம்புலன்ஸ்கள் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து பலர் திருப்பூர் வந்திருந்தனர் அவர்களிடம் பிரேத பரிசோதனை முடித்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் சிலர் கேரள மருத்துவ மனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற காயமடைந்தவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள அரசின் "பஸ் டே" அன்று நடந்த கோர விபத்து
கேரள மாநிலத்தின் அரசு பேருந்து துவக்கப்பட்ட நாளில் அரசு சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் அம்மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி கேரள மாநிலத்தில் 'பஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கேரள அரசு பேருந்து துவக்கப்பட்டு 82-ம் ஆண்டு தினமாகும். 1938-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி ஸ்ரீ சித்திரை திருநாள் மன்னர், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" எனும் பெயரில் பேருந்து போக்குவரத்தை துவக்கி வைத்தார். முதல் நாள் பேருந்து பயணத்தில் மன்னரும், அவரது உறவினர்களும் பயணம் செய்து முதல் அரசு பேருந்து பயணத்தை துவக்கி வைத்து உள்ளனர்.
1965-ம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சி. எனும் கேரள அரசின் போக்குவரத்து துறை துவக்கப்பட்டாலும், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" துவக்க நாளை அடிப்படையாக கொண்டே பிப்ரவரி 20-ம் தேதி பஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் அவிநாசி அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடி வலைதளங்களில் வீடியோ வைரல்
15 Jul 2025துபாய், பறக்கும் விமானத்தில் திருமணம் செய்த ஜோடிகளில் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.