எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் அருகே கேரள அரசு பஸ் - டேங்கர் லாரி மோதிய கோரவிபத்தில் 19 பேர் பலியாகினர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, சேலத்திலிருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி டைல்ஸ் லோடு ஏற்றி வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் சிக்கிய பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், அந்த வழியாகச் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி பேருந்து விபத்தில் சிக்கியவர்களையும் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதிகாலையில் நடந்த இந்த பயங்கர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 48 பேரில் தற்போது வரை நான்கு பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை திருப்பூர் மற்றும் கோவை அரசு, தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவ இடத்திற்குச் நேரில் வந்து பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது:
கேரள அரசு சொகுசு பேருந்தில் 48 பேர் பயணம் செய்து வந்துள்ளனர். விபத்தில் இறந்த, காயமடைந்தவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பேருந்து கேரளா அரசின் சொகுசு பேருந்து என்பதால் பாலக்காடு மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு கேரளாவில் இருந்து ஒரு குழு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தீயணைப்பு துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் காவல் துறையும், வருவாய் துறை அலுவலர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் பலியானவர்கள் பற்றி தகவல் சேகரிக்கப்பட்டு கேரளா அரசுக்கு தெரிவித்து அரசு நிதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த விபத்து லாரி டிரைவரின் அஜாக்கிரதையால் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.
மேலும் அவினாசி கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரங்கள் குறித்து தகவலுக்கு 97466 40662 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விபத்து குறித்து பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்காக 7708331194 என்ற அவசர உதவி எண்ணையும் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவினாசி கோர விபத்து குறித்து காவல் துறையினர் விசாரித்ததில், கண்டெய்னர் லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த தடுப்பைக் கவனிக்காமல் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதென தெரியவந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய லாரியிலிருந்த ஓட்டுநர் உள்ளிட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் தப்பியோடியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்த மீட்பு பணிகளுக்காக கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன், வேளாண் அமைச்சர் சுனில்குமார், ஆலத்தூர் எம்.பி.ஹரிதாஸ், பாலக்காடு எம்.பி.சாபிபரம்பில் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின்னர் இறந்த, காயம் அடைந்தவர்கள் இருந்த அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளுக்கு வந்து பார்வையிட்டு சிகிச்சை குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் கேரள முதல்வர் உத்தரவின் பேரில் விபத்தில் சிக்கியவர்களின் சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும், மரணமடைந்தவர்களின் உடல்களை கேரளாவுக்கு கொண்டு வர 20 ஆம்புலன்ஸ்கள் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விபத்தில் மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் தகவல் அறிந்து பலர் திருப்பூர் வந்திருந்தனர் அவர்களிடம் பிரேத பரிசோதனை முடித்த உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. காயம் அடைந்தவர்களில் சிலர் கேரள மருத்துவ மனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மற்ற காயமடைந்தவர்கள் திருப்பூர் மற்றும் கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள அரசின் "பஸ் டே" அன்று நடந்த கோர விபத்து
கேரள மாநிலத்தின் அரசு பேருந்து துவக்கப்பட்ட நாளில் அரசு சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் அம்மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி கேரள மாநிலத்தில் 'பஸ் டே' கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று கேரள அரசு பேருந்து துவக்கப்பட்டு 82-ம் ஆண்டு தினமாகும். 1938-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி ஸ்ரீ சித்திரை திருநாள் மன்னர், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" எனும் பெயரில் பேருந்து போக்குவரத்தை துவக்கி வைத்தார். முதல் நாள் பேருந்து பயணத்தில் மன்னரும், அவரது உறவினர்களும் பயணம் செய்து முதல் அரசு பேருந்து பயணத்தை துவக்கி வைத்து உள்ளனர்.
1965-ம் ஆண்டு கே.எஸ்.ஆர்.டி.சி. எனும் கேரள அரசின் போக்குவரத்து துறை துவக்கப்பட்டாலும், "தி ஸ்டேட் மோட்டார் சர்வீஸ்" துவக்க நாளை அடிப்படையாக கொண்டே பிப்ரவரி 20-ம் தேதி பஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் அவிநாசி அருகே இந்த கோர விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026 -
தமிழ்நாடு மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
07 Jan 2026சென்னை, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 2026 தேர்தல் நமது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் சவால்: தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
07 Jan 2026சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?
-
ஜன. 28-ம் தேதி பிரதமர் தமிழ்நாடு வருகிறார்...? கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்
07 Jan 2026சென்னை, வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகயுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இறுதி செய்ய பா.ஜ.க.
-
இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
07 Jan 2026சென்னை, இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு: இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை
07 Jan 2026புதுடெல்லி, இந்தியா-இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
-
தொலைந்து போன பயண அட்டைகளில் உள்ள தொகையை மாற்ற இயலாது : மெட்ரோ நிர்வாகம் நிர்வாகம்
07 Jan 2026சென்னை, தொலைந்து போன மெட்ரோ பயண அட்டைகளில் தொகையை மாற்ற இயலாது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: டாக்டர் ராமதாஸ் முக்கிய தகவல்
07 Jan 2026சென்னை, இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான புதிய தகவல்
07 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க.வுக்கு 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு புதிய அறிவிப்புகள்
07 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
-
கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த விவகாரம்: மாணவிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
07 Jan 2026மதுரை, கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
07 Jan 2026தமிழகத்தில் ஜன. 9-ம் தேதி முதல் 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
அதிகமான வரிவிதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
07 Jan 2026வாஷிங்டன், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 2 23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு
07 Jan 2026சென்னை, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன
-
பாக்.கிற்கு ரகசிய தகவல்களை அளித்த இந்திய சிறுவன் கைது
07 Jan 2026சண்டிகார், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
-
நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
07 Jan 2026சென்னை, சென்னையில் நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டது.
-
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு
07 Jan 2026காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவர
-
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதா..? தமிழ்நாடு அரசு விளக்கம்
07 Jan 2026சென்னை, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருமடங்கு (ரூ.6) விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப
-
துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்
07 Jan 2026நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தால் பரபரப்பு
07 Jan 2026திண்டுக்கல், முதல்வர் ஸ்டாலின் சென்ற கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்க வேண்டும்: செங்கோட்டையன் கருத்து
07 Jan 2026சென்னை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விவகாரம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
டி-20 உலக கோப்பை தொடர்: வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்பு
07 Jan 2026லண்டன், இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி-20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் அதிகரிப்பு...
-
அரசுக்கு எதிரான போராட்டங்கள்: ஈரானில் உயிரிழப்பு 36 ஆக உயர்வு
07 Jan 2026டெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
-
நியூசி.க்கு எதிரான தொடரில் விளையாடுகிறார் ஷ்ரேயாஸ் : பி.சி.சி.ஐ. வெளியிட்ட முக்கிய தகவல்
07 Jan 2026புதுடெல்லி, பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.


