முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவை வரும் மார்ச் 15 - ந் தேதி வரை ரத்து : பாக். முடிவு

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : கொரோனா வைரஸ் பாதித்த சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை வரும் மார்ச் 15 - ந் தேதி வரை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,592 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 79 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனை அடுத்து, கடந்த ஜனவரி 31ந்தேதியில் இருந்து பிப்ரவரி 2 ந் தேதி வரை சீனாவுக்கான விமான போக்குவரத்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்திருந்தது. இதன்பின்பு கடந்த பிப்ரவரி 3 ந் தேதி விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தொடர்ந்து பலர் பலியாகி வரும் நிலையில், அந்நாட்டுக்கான விமான போக்குவரத்து சேவையை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இதுபற்றி பாகிஸ்தான் இன்டர்நேசனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன செய்தி தொடர்பு அதிகாரி அப்துல்லா ஹபீஸ் கூறுகையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வருகிற மார்ச் 15 - ந் தேதி வரை விமான போக்குவரத்து சேவையை ரத்து செய்வது என முடிவு செய்துள்ளோம். சீனாவுக்கு விமான போக்குவரத்து சேவையை மீண்டும் இயக்குவது பற்றி நிலைமையை கவனத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து