முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைய முயன்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது

வியாழக்கிழமை, 5 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

பராகுவே : போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பராகுவே காவல்துறையினரால் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார்.

பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும், 2005 ஆம் ஆண்டு பாலோன் டி'ஓர் விருதையும் வென்றவர்.பிரேசில் 2002 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். இந்த நிலையில் ரொனால்டினோ தென் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய தவறான ஆவணங்களைப் பயன்படுத்தியதாக பராகுவேயில் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை இரவு ரொனால்டினோவும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. போலி பாஸ்போர்ட் தொடர்பான புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து