எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினுடன் கை குலுக்கிய டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் புடினுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய 2 ஐரோப்பிய நாடுகளும் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவை பொறுத்தமட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அந்த நாடு 27-வது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்களை மிக குறைவான எண்ணிக்கையில் கொண்ட 2-வது நாடாக ரஷ்யா இருந்தது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதையடுத்து, தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. உணவு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறும் நபர் களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 லட்சம் வரை அபராதமும் விதிக்கப் படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து அவருடன் கை குலுங்கிய டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் மாஸ்கோவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஆஸ்பத்திரிக்கு அதிபர் புடின் நேரில் சென்று ஆய்வு செய்தார். முக கவசம், கையுறைகள் என எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் சாதாரணமாக ஆஸ்பத்திரி நடவடிக்கைகளை புடின் ஆய்வு செய்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க கை குலுக்குவது, கட்டி தழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வரும் நிலையில், ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோ என்பவருடன் புடின் சகஜமாக கை குலுக்கினார். இந்த நிலையில், டாக்டர் டெனிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் அதே ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அதிபர் புடினுடன் நெருக்கமாக இருந்த டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டாக் டரிடம் இருந்து அவருக்கும் வைரஸ் பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஆனால் புடின் வழக்கம் போல் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
பரஸ்பர நலன்கள்-பொருளாதார விஷயங்கள் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் நேரில் ஆலோசனை
04 Feb 2026வாஷிங்டன், அமெரிக்கா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை தனித்தன
-
மீண்டும் ரூ. 15 ஆயிரத்தை நெருங்கும் 1 கிராம் தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.5,040 உயர்வு
04 Feb 2026சென்னை, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14900-க்கும், பவுனுக்கு ரூ.5,040 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,19,200-க்கும் விற்பனையானது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.4.09 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
04 Feb 2026சென்னை, துபையிலிருந்து பெண் பயணியொருவா் கடத்தி வந்த ரூ.
-
சீன அதிபருடன் காணொலி மூலம் பேசிய ரஷ்ய அதிபர்
04 Feb 2026பெய்ஜிங், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் காணொலி மூலம் உரையாடியுள்ளார்.
-
தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகல்: அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் டெல்லி பா.ஜ.க. தலைமை
04 Feb 2026சென்னை, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து திடீரென அண்ணாமலை விலகிய நிலையில் டெல்லி பா.ஜ.க.
-
விதியை மீறி மதுபானக்கடைகள்: ஐகோர்ட் மதுரை கிளைக்கு ராமதாஸ் வேண்டுகோள்
04 Feb 2026சென்னை, பள்ளி, கோயில்களுக்கு அருகில் விதியை மீறி எத்தனை மதுக்கடைகள் நடத்தப்படுகிறது என்ற விவரத்தையும் அளிக்குமாறு மாநில அரசுக்கு நீதிமன்றம் கூடுதலாக உத்தரவிட்டு, அந்த வ
-
எப்ஸ்டீன் பற்றி கேள்வி கேட்ட தனியார் பெண் செய்தியாளருக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பரபரப்பு
04 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் கசிந்தது தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் செய்தியாளர்களைப் பார்த்து, ஒரு மோசமான செய்தியாளர், நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை என
-
லிபிய நாட்டில் பரபரப்பு: முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் கொலை
04 Feb 2026ட்ரிபோலி, லிபியாவின் மறைந்த முன்னாள் சர்வாதிகார அதிபர் மும்மெர் கடாஃபியின் மகன் புதன்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கடும் பனிப்பொழிவு: ஜப்பானில் பலி 35 ஆக உயர்வு
04 Feb 2026டோக்கியோ, ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


