எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கொரோனை வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாததால் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அவர்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஒரிசா, மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்று(நேற்று) 3 முகாம்களுக்கு சென்று பார்வையிட்டேன்.
வெளிமாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 336 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் 3 ஆயிரத்து 409 பேர் பணிபுரிகிறார்கள். உணவு கூடங்களில் 7 ஆயிரத்து 871 பேர் பணிபுரிகிறார்கள். பண்ணைகளில் 4 ஆயிரத்து 953 பேர் பணிபுரிகிறார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 569 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் 7 ஆயிரத்து 198 பேர் பணிபுரிகிறார்கள் என்று முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் எந்த தடையும் இல்லை. வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் வரவேண்டி உள்ளது. பல மாநிலங்களில் ஒவ்வொரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர எந்த தடையும் கூடாது என பிரதமர் கூறியிருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று நோய் மிகப்பெரிய கொடிய தொற்று நோய். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எந்தெந்த நாட்டில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பார்க்கிறோம். இந்த நோயின் வீரியம் புரியாமல் சிலர் விளையாட்டு தனமாக வெளியே வாகனங்களில் சுற்றுகிறார்கள். நோயின் தாக்கம் எப்படி என்பதை உணர வேண்டும். இந்த நோய்க்கு மருந்து இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் உலுக்கி வரும் நோய் இது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அனைவரும் இந்த தடை உத்தரவை கடைப்பிடிப்பார்கள் என்று பொறுமையாக இருந்தோம். இந்த தடை உத்தரவு என்பது அனைவரையும் பாதுகாக்கத்தான். எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். ஒவ்வொரு உயிரும் முக்கியம். அரசின் நோக்கம் இந்த நோயை தடுப்பது தான். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.எனவே தான் தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடைகளுக்கு தினசரி போக வேண்டாம். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி வெளியே செல்ல தேவை இல்லை. எனவே இதனை கடைப்பிடிப்பது மக்களின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. எனவே சட்டம் தனது கடமையை செய்யும். அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. எனவே மக்கள் இதற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் 144 தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழி இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு அரசு விலையின்றி 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணை போன்றவைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
வடகிழக்கு பருவமழை தீவிரம்: தமிழ்நாடு முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
தீபாவளி பண்டிகையை கோவாவில் கடற்படை வீரர்களுடன் கொண்டாட பிரதமர் மோடி திட்டம்
17 Oct 2025புதுடெல்லி : இந்த ஆண்டு தீபாவளியை கோவா கடற்கரையில் கடற்படை வீரர்களுடன் இணைந்து கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
ஜி.டி.நாயுடு பாலத்தில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை: அமைச்சர் உறுதி
17 Oct 2025சென்னை : ஜி.டி.நாயுடு புதிய மேம்பாலம் பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்: புகாரளிக்க தொடர்பு எண்கள் அறிவிப்பு
17 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் ஆப் மூலமும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்கள
-
நெல் கொள்முதல் விவகாரம்: இ.பி.எஸ். குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதில்
17 Oct 2025சென்னை : நெல் தேங்குவதற்கு மத்திய அரசே காரணம் என்று இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தினமும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் : சட்டசபையில் இ.பி.எஸ். வலியுறுத்தல்
17 Oct 2025சென்னை : நெல்கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இனி சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம்: போக்குவரத்து துறை கடும் எச்சரிக்கை
17 Oct 2025சென்னை, சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
துணை ஜனாதிபதி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Oct 2025சென்னை : துணை ஜனாதிபதி, முன்னாள் தலைமை செயலாளர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.