எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கொரோனை வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாததால் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அவர்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஒரிசா, மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்று(நேற்று) 3 முகாம்களுக்கு சென்று பார்வையிட்டேன்.
வெளிமாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 336 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் 3 ஆயிரத்து 409 பேர் பணிபுரிகிறார்கள். உணவு கூடங்களில் 7 ஆயிரத்து 871 பேர் பணிபுரிகிறார்கள். பண்ணைகளில் 4 ஆயிரத்து 953 பேர் பணிபுரிகிறார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 569 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் 7 ஆயிரத்து 198 பேர் பணிபுரிகிறார்கள் என்று முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் எந்த தடையும் இல்லை. வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் வரவேண்டி உள்ளது. பல மாநிலங்களில் ஒவ்வொரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர எந்த தடையும் கூடாது என பிரதமர் கூறியிருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று நோய் மிகப்பெரிய கொடிய தொற்று நோய். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எந்தெந்த நாட்டில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பார்க்கிறோம். இந்த நோயின் வீரியம் புரியாமல் சிலர் விளையாட்டு தனமாக வெளியே வாகனங்களில் சுற்றுகிறார்கள். நோயின் தாக்கம் எப்படி என்பதை உணர வேண்டும். இந்த நோய்க்கு மருந்து இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் உலுக்கி வரும் நோய் இது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அனைவரும் இந்த தடை உத்தரவை கடைப்பிடிப்பார்கள் என்று பொறுமையாக இருந்தோம். இந்த தடை உத்தரவு என்பது அனைவரையும் பாதுகாக்கத்தான். எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். ஒவ்வொரு உயிரும் முக்கியம். அரசின் நோக்கம் இந்த நோயை தடுப்பது தான். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.எனவே தான் தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடைகளுக்கு தினசரி போக வேண்டாம். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி வெளியே செல்ல தேவை இல்லை. எனவே இதனை கடைப்பிடிப்பது மக்களின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. எனவே சட்டம் தனது கடமையை செய்யும். அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. எனவே மக்கள் இதற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் 144 தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழி இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு அரசு விலையின்றி 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணை போன்றவைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


