எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கொரோனை வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.
வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாததால் தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அவர்கள் தங்கி உள்ள முகாம்களுக்கு நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உணவு, உடைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஒரிசா, மேற்கு வங்கம், அசாம், ஜார்கண்ட், உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் இப்போது பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இன்று(நேற்று) 3 முகாம்களுக்கு சென்று பார்வையிட்டேன்.
வெளிமாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 336 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் 3 ஆயிரத்து 409 பேர் பணிபுரிகிறார்கள். உணவு கூடங்களில் 7 ஆயிரத்து 871 பேர் பணிபுரிகிறார்கள். பண்ணைகளில் 4 ஆயிரத்து 953 பேர் பணிபுரிகிறார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 569 தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் 7 ஆயிரத்து 198 பேர் பணிபுரிகிறார்கள் என்று முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் எந்த தடையும் இல்லை. வேறு மாநிலங்களில் இருந்து பொருட்கள் வரவேண்டி உள்ளது. பல மாநிலங்களில் ஒவ்வொரு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். அத்தியாவசிய பொருட்களை கொண்டு வர எந்த தடையும் கூடாது என பிரதமர் கூறியிருக்கிறார் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று நோய் மிகப்பெரிய கொடிய தொற்று நோய். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் தொடர்ந்து சொல்லி வருகிறோம். எந்தெந்த நாட்டில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை பார்க்கிறோம். இந்த நோயின் வீரியம் புரியாமல் சிலர் விளையாட்டு தனமாக வெளியே வாகனங்களில் சுற்றுகிறார்கள். நோயின் தாக்கம் எப்படி என்பதை உணர வேண்டும். இந்த நோய்க்கு மருந்து இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் உலுக்கி வரும் நோய் இது. இந்த நோயை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அனைவரும் இந்த தடை உத்தரவை கடைப்பிடிப்பார்கள் என்று பொறுமையாக இருந்தோம். இந்த தடை உத்தரவு என்பது அனைவரையும் பாதுகாக்கத்தான். எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். அரசுக்கு ஒவ்வொரு குடும்பமும் முக்கியம். ஒவ்வொரு உயிரும் முக்கியம். அரசின் நோக்கம் இந்த நோயை தடுப்பது தான். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.எனவே தான் தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அதற்கு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. கடைகளுக்கு தினசரி போக வேண்டாம். ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினசரி வெளியே செல்ல தேவை இல்லை. எனவே இதனை கடைப்பிடிப்பது மக்களின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. எனவே சட்டம் தனது கடமையை செய்யும். அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. எனவே மக்கள் இதற்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் 144 தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர வேறு வழி இல்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழகத்தில் உள்ள பிற மாநில தொழிலாளர்களுக்கு அரசு விலையின்றி 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணை போன்றவைகளை வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
பீனிக்ஸ் திரைவிமர்சனம்
07 Jul 2025அண்ணன் கொலைக்கு பழி வாங்கும் ஒரு தம்பியின் கதை தான் பீனிக்ஸ் படத்தின் ஒரு வரிக்கதை.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் ஆண்டனி
07 Jul 2025லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீசன் சமுத்திரக்கனி, பிரிகிடா தீப்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 27 அன்று வெளியான படம் மார்கன்.
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜுராசிக் பார்க் ரீபெர்த் விமர்சனம்
07 Jul 2025ஜுராசிக் பார்க் இதுவரை 2 அத்தியாயம் முடிந்து தற்போது மூன்றாவது அத்தியாயம் வெளியாகியுள்ளது.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.