முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணவுப் பொருட்களை பதுக்குபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுங்கள்: மாநில அரசுகளுக்கு அமித்ஷா உத்தரவு

புதன்கிழமை, 8 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

ஊரடங்கு கால கட்டத்தில் உணவுப்பொருட்கள் பதுக்கலையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்தும் வகையில், நமது நாட்டில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அதை நீட்டிக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசுகள் முறையிட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் உணவுப்பொருட்கள், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளன.இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் ஊரடங்கு காலகட்டத்தில் வியாபாரிகள் உணவுப் பொருட்களை பதுக்குவதையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்துங்கள், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இதற்கு தேவையான கிரிமினல் நடவடிக்கைகளை எடுங்கள் என்று அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி உள்துறை இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்தியாவசிய பொருட்கள் (உணவு பொருட்கள்) இருப்பு, 21 நாள் ஊரடங்கு அமல் ஆகியவை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ஒரு ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்துதான், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு, உணவுப்பொருட்கள் பதுக்கலையும், அவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிற உணவுப்பொருட்களுடன் மருந்துப்பொருட்கள் நடமாட்டத்தை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் சேவைகளின் நிலை திருப்திகரமாக உள்ளது. சிவில் விமானப்போக்குவரத்து துறையின் லைப்லைன் உதான் திட்டத்தின்கீழ் செயல்படும் விமானம், 200 டன் சரக்குகளை கொண்டு சென்றுள்ளது. ரெயில்வே 8,897 ரேக்குகளிலும் (கண்டெய்னர்கள்), 4.57 லட்சம் வேகன்களிலும் (பெட்டிகள்) அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கின்றன. ஒருபுறம் மக்கள் போக்குவரத்தை நிறுத்தி உள்ளன. இன்னொரு புறம் பரிசோதனை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தி வருகின்றன என்று குறிப்பிட்டார். அடுத்த வாரம் தொடர்ச்சியாக பல பண்டிகைகள் வருகிற நிலையில், பண்டிகை காலத்தில் ஊரடங்கை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு பல்வேறு சமூக தலைவர்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து