முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

திங்கட்கிழமை, 4 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 212 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், 2.28 லட்சம் மக்களை பலி வாங்கி உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். சிங்கப்பூரில் 18,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் சிங்கப்பூரில் ஏப்ரல் இறுதி வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 4,800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள இந்தியர்களில் 90 சதவீதம் பேர், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள்.

இவர்களில் பெரும்பாலும் நெரிசல் மிகுந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள். நோய்த்தோற்று கண்டறியப்பட்டுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு தீவிரம் இல்லை என்றும், உடல்நிலை தேறி வருவதாகவும் இந்திய தூதர் கூறி உள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து