முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாட உத்வேகமாக இருக்கிறேன் டு பிளிஸ்சிஸ்

திங்கட்கிழமை, 4 மே 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கேப்டவுன் : கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கிய பின்னர் தென்ஆப்பிரிக்கா அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாட உத்வேகமாக இருக்கிறேன் என்று டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார். 

தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டனாக இருந்தவர் டு பிளிஸ்சிஸ். இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடருக்குப்பின் ஒருநாள் மற்றும் டி - 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். இரண்டு வடிவ கிரிக்கெட்டிலும் குயிண்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு ஆலோசித்து வருகிறது.

இதனால் டி - 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் டு பிளிஸ்சிஸ் விளையாடமாட்டார் எனக் கருதப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இனிமேல் எப்போது கிரிக்கெட் தொடங்கும் என உறுதியாக தெரியவில்லை. ஐ.பி.எல். தொடரும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் 2020 - 2021 சீசன் முழுவதும் தென்ஆப்பிரிக்கா அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புவதாக டு பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டு பிளிஸ்சிஸ் கூறுகையில், தென்ஆப்பிரிக்கா அணிக்காக கிரிக்கெட் விளையாடுவதை தற்போது வரை விரும்புகிறேன். அணிக்கு என்னால் பெருமை சேர்க்க முடியும் என்பதை பார்க்கிறேன். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட மிகவும் உத்வேகமாக இருக்கிறேன்.

தற்போது கிரிக்கெட் இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரம், இன்னும் அதிகமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற பசியை தூண்டியுள்ளது என்றார்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து