முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று முதல் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி

வெள்ளிக்கிழமை, 22 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இன்று முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவு படி திருவள்ளூர் மேற்கில் கூடுதலாக 83 கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக 11 கடைகளையும் இன்று திறக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்று முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகள் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவின்படி திருவள்ளூர் மேற்கில் கூடுதலாக 83 கடைகளும், காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக 11 கடைகளும் இன்று முதல் திறக்கப்படுவதாக  டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து