முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை ராயபுரத்தில் பொதுமக்களுக்கு ஓமியோபதி வைட்டமின் மாத்திரைகள் : அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்

சனிக்கிழமை, 23 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருவொற்றியூர் : சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் மைதானத்தில் கொரோனாவுக்கு எதிராக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்களுக்கு ஓமியோபதி வைட்டமின் மாத்திரைகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் உள்ள மருத்துவ குழுவினர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாக மருந்து கண்டுபிடிக்க வேண்டும். சித்தா மற்றும் ஓமியோபதி முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஓமியோபதி முறையில் ஆர்சனிக் ஆல்பம் 30 சி என்ற மாத்திரை கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குகிறது.

இதனை பயன்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்களுக்கு இந்த ஆர்சனிக் ஆல்பம் 30 சி மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று இருப்பதால், இங்கு முதன் முதலாக இந்த பணியை தொடங்குகிறோம். தமிழகம் முழுவதும் 20 லட்சம் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

மீனவ நலவாரியம் சார்பில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே ரூ.1000 கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்டமாக மேலும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மீனவர் குடும்பம் என கணக்கெடுக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து