எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அம்மாவின் இல்லத்தை ஆலயம் ஆக்கி இப்புவி உள்ளவரை அழியா புகழை அம்மாவுக்கு பெற்றுத்தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீர்மானத்தை நிறைவேற்றினார்
புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார் அதனை தொடர்ந்து, அம்மா வாழ்ந்த இல்லத்தை தமிழ் வளர்ச்சித் துறை நிர்வாக ஒப்புதல் அளித்தது அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்த வதற்காக பூர்வாங்க அறிவிப்பு கடந்த, 28.6 2020 அன்று வெளியிடப்பட்டது அதன்பின் 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது இதைத்தொடர்ந்து அம்மா இல்லம் மற்றும் அசையும் சொத்துக்கள் தற்காலிகமாக அரசுடைமை ஆக்கியும், வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைக்கவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார் இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணைத்தலைவர் முதல்வரும் மற்றும் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் இன்று நன்றி தெரிவித்து வரும் வேளையில் கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது;
ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களும், உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள் கும்பிட்டு மகிழ்கின்ற, ஒப்பில்லா பெரும் தலைவி, தமிழர் குலசாமி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, சுவாசித்த இல்லத்தை, உலகமே பூஜித்து மகிழ்ந்திட வகையில்,கடந்த 17.8.2020 அன்று வரலாற்று மிக்க சட்டப்பேரவையில் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், விவசாயிகள் பாதுகாவலர், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அம்மாவிற்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், கொடை உள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்து கொள்ளும் வகையிலும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு, இதன்மூலம் அம்மாவின் இல்லத்தை ஆலயமாக்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்
தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக அம்மா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது இதன் மூலம் இப் புவி உள்ளவரை ,அம்மாவின் புகழை மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்த, கொங்கு நாட்டு தங்கம், இரண்டாம் கரிகாலச்சோழன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாட்டு பண்பாளர், துணைமுதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவை நெஞ்சார்ந்த நன்றியை உள்ளத்து பூரிப்போடு உரித்தாக்கி மகிழ்கிறது.
உலைக்கு விலையில்லா அரிசி, விஞ்ஞான யுகத்திற்கு நம் குலப் பெண்களை விரல் பிடித்து அழைத்து வந்து மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இவற்றோடு கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கறவை மாடு, மற்றும் வெள்ளாடு வழங்கும் ஒப்பிலா திட்டத்தோடு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்குகிற தன்னிகரில்லா வழங்கும் திட்டத்தோடு, மகளிர் காவல் நிலையம், மழைநீர் சேகரிப்பு, இவற்றோடு மரத்தடி வகுப்புகளை மடிக்கணினி வகுப்புகளாக மாற்றிய மகோனதம், மக்களை தேடி அரசு எனும் மறுமலர்ச்சி என்றெல்லாம் இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கமாக திருப்பி காட்டிய, தெய்வீக தேவதையின் உறைவிடமாம் வேதா இல்லத்தை, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் வருகைதந்து தரிசிக்கும், வெற்றித் திருமகளின் நினைவிடம் ஆக்கித் தந்த, கழகத்தின் எல்லைச்சாமிகளாம், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோருக்கு, அம்மாவை நெஞ்சத்தால் நிறுத்தி குலசாமியாய் கும்பிட்டு மகிழும், ஒன்னரை கோடி கழக தொண்டர்கள் சார்பில் கழக அம்மா பேரவை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி நன்றி மலர்களை காணிக்கையாக்கி மகிழ்கிறது
வரலாறு படித்தோருக்கு மத்தியில், வரலாறு படைத்திட்ட வாகை தலைவியாக, ஆறறிவு படைத்த தலைவர்களுக்கு மத்தியில் நூறு அறிவு பெட்டகமாய் திகழ்ந்து, அன்னை தமிழகத்தை அகில இந்தியாவின் முன்னேறிய முதன்மை மாநிலமாக்க, தன் ஆயுளையே அர்ப்பணித்து உழைத்திட்ட, அம்மாவின் புகழ் நிறைந்த பொக்கிஷ வரலாற்றை ,வருங்கால தலைமுறை வந்து வாசித்து வணங்கி செல்வதற்கான படிப்பகமாய்,
தாய் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசின் சார்பில் நினைவு இல்லமாக அமைத்து தந்தமைக்காக இப் புவியியல் காலம் உள்ளவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், அப்பழுக்கில்லாத தமிழர்களும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், மாண்புமிகு முதலமைச்சர் ,அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான, தமிழக அரசை என்னாளும் கொண்டாடி மகிழ்வார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்து கொண்டு,
என்றைக்கும்நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை மாண்புமிகு முதலமைச்சருக்கும்,மாண்புமிகு முதலமைச்சருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை,கழக அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் கழக அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.