எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : அம்மாவின் இல்லத்தை ஆலயம் ஆக்கி இப்புவி உள்ளவரை அழியா புகழை அம்மாவுக்கு பெற்றுத்தந்த கழகத்தின் காவலர்கள் முதலமைச்சர் மற்றும் முதலமைச்சருக்கு கோடான கோடி நன்றி மலர்களை காணிக்கையாக்கி அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீர்மானத்தை நிறைவேற்றினார்
புரட்சித்தலைவி அம்மாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார் அதனை தொடர்ந்து, அம்மா வாழ்ந்த இல்லத்தை தமிழ் வளர்ச்சித் துறை நிர்வாக ஒப்புதல் அளித்தது அதை தொடர்ந்து அந்த நிலம் மற்றும் நிலத்தை கையகப்படுத்த வதற்காக பூர்வாங்க அறிவிப்பு கடந்த, 28.6 2020 அன்று வெளியிடப்பட்டது அதன்பின் 6.5.2020 அன்று இதற்கான உறுதி ஆவணம் வெளியிடப்பட்டது இதைத்தொடர்ந்து அம்மா இல்லம் மற்றும் அசையும் சொத்துக்கள் தற்காலிகமாக அரசுடைமை ஆக்கியும், வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை அமைக்கவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவசர சட்டத்தைப் பிறப்பித்தார் இந்த அறக்கட்டளை தலைவராக முதல்வரும் மற்றும் துணைத்தலைவர் முதல்வரும் மற்றும் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் உறுப்பினராக இருப்பார்கள் என்று தமிழக அரசின் சார்பில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது இந்த அறிவிப்பால் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் இன்று நன்றி தெரிவித்து வரும் வேளையில் கழக அம்மா பேரவை சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றியது;
ஒன்றரை கோடி கழகத் தொண்டர்களும், உலகமெங்கும் வாழும் தமிழக மக்கள் கும்பிட்டு மகிழ்கின்ற, ஒப்பில்லா பெரும் தலைவி, தமிழர் குலசாமி, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா, சுவாசித்த இல்லத்தை, உலகமே பூஜித்து மகிழ்ந்திட வகையில்,கடந்த 17.8.2020 அன்று வரலாற்று மிக்க சட்டப்பேரவையில் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், விவசாயிகள் பாதுகாவலர், கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அம்மாவிற்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, தமிழக மக்களுக்கு அம்மா செய்த சாதனைகளையும், தியாகங்களையும், கொடை உள்ளத்தையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், வருங்கால இளைய சமுதாயமும் அறிந்து கொள்ளும் வகையிலும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டு, இதன்மூலம் அம்மாவின் இல்லத்தை ஆலயமாக்கும் வண்ணம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று அறிவித்தார்
தொடர்ந்து தற்போது ஒட்டுமொத்த தமிழினத்திற்கு மகிழ்ச்சிகரமான செய்தியாக அம்மா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது இதன் மூலம் இப் புவி உள்ளவரை ,அம்மாவின் புகழை மங்கா புகழாக உருவாக்கி, என்றைக்கும் அம்மாவிற்கு அழியாப் புகழை உருவாக்கித் தந்த, கொங்கு நாட்டு தங்கம், இரண்டாம் கரிகாலச்சோழன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருக்கும் பாண்டியநாட்டு பண்பாளர், துணைமுதலமைச்சருக்கும் கழக அம்மா பேரவை நெஞ்சார்ந்த நன்றியை உள்ளத்து பூரிப்போடு உரித்தாக்கி மகிழ்கிறது.
உலைக்கு விலையில்லா அரிசி, விஞ்ஞான யுகத்திற்கு நம் குலப் பெண்களை விரல் பிடித்து அழைத்து வந்து மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இவற்றோடு கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு கறவை மாடு, மற்றும் வெள்ளாடு வழங்கும் ஒப்பிலா திட்டத்தோடு, ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்குகிற தன்னிகரில்லா வழங்கும் திட்டத்தோடு, மகளிர் காவல் நிலையம், மழைநீர் சேகரிப்பு, இவற்றோடு மரத்தடி வகுப்புகளை மடிக்கணினி வகுப்புகளாக மாற்றிய மகோனதம், மக்களை தேடி அரசு எனும் மறுமலர்ச்சி என்றெல்லாம் இந்நாட்டு அரசியலை தென்னாட்டு பக்கமாக திருப்பி காட்டிய, தெய்வீக தேவதையின் உறைவிடமாம் வேதா இல்லத்தை, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் வருகைதந்து தரிசிக்கும், வெற்றித் திருமகளின் நினைவிடம் ஆக்கித் தந்த, கழகத்தின் எல்லைச்சாமிகளாம், மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோருக்கு, அம்மாவை நெஞ்சத்தால் நிறுத்தி குலசாமியாய் கும்பிட்டு மகிழும், ஒன்னரை கோடி கழக தொண்டர்கள் சார்பில் கழக அம்மா பேரவை தங்களின் பொற்பாதம் பணிந்து, வணங்கி நன்றி மலர்களை காணிக்கையாக்கி மகிழ்கிறது
வரலாறு படித்தோருக்கு மத்தியில், வரலாறு படைத்திட்ட வாகை தலைவியாக, ஆறறிவு படைத்த தலைவர்களுக்கு மத்தியில் நூறு அறிவு பெட்டகமாய் திகழ்ந்து, அன்னை தமிழகத்தை அகில இந்தியாவின் முன்னேறிய முதன்மை மாநிலமாக்க, தன் ஆயுளையே அர்ப்பணித்து உழைத்திட்ட, அம்மாவின் புகழ் நிறைந்த பொக்கிஷ வரலாற்றை ,வருங்கால தலைமுறை வந்து வாசித்து வணங்கி செல்வதற்கான படிப்பகமாய்,
தாய் வாழ்ந்த இல்லத்தை தமிழக அரசின் சார்பில் நினைவு இல்லமாக அமைத்து தந்தமைக்காக இப் புவியியல் காலம் உள்ளவரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும், அப்பழுக்கில்லாத தமிழர்களும், இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், மாண்புமிகு முதலமைச்சர் ,அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான, தமிழக அரசை என்னாளும் கொண்டாடி மகிழ்வார்கள் என்பதை பெருமையோடு தெரிவித்து கொண்டு,
என்றைக்கும்நன்றி மறவாத இனம் நம் தமிழினம் என்பதை உலகிற்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில், வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியினை மாண்புமிகு முதலமைச்சருக்கும்,மாண்புமிகு முதலமைச்சருக்கும் ஒட்டுமொத்த தமிழ் சமுதாய மக்கள் வழங்குவார்கள் என்பதை,கழக அம்மா பேரவை மகிழ்வோடு, பெருமையோடு சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு முறை கழகத்தின் காவலர்களான, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் ஆகியோரை பொற்பாதம் பணிந்து, வணங்கி, தங்களின் பாத தடத்தின் வழியில் என்றைக்கும் கழக அம்மா பேரவை ராணுவ சிப்பாயாக பணியாற்றி, கழகத்திற்கு அரணாக இருந்து புதிய வெற்றி வரலாறு சரித்திரம் படைக்க களப்பணி ஆற்றுவோம் என்று சூளுரை ஏற்கிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மதுரையில் பயங்கரம்: கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை
16 Sep 2025மதுரை : மதுரையில் கூலிப்படையை ஏவி தொழிலதிபர் கொலை செய்யப்பட்டதை அடுத்து பங்குதாரர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
இன்று முதல் திருச்சியில்-டெல்லி நேரடி விமான சேவை தொடக்கம்
16 Sep 2025திருச்சி : திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
-
உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு சாலைகள் துண்டிப்பு
16 Sep 2025உத்தரகாண்ட் : உத்தரகாண்டில் மேகவெடிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலைகள் துண்டிக்கப்பட்டது 5 பேர் மாயமாகி உள்ளனர்.
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
அதிபர் ட்ரம்ப் இங்கிலாந்து பயணம்
16 Sep 2025லண்டன் : இங்கிலாந்துக்கு 3 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்படுகிறார்.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்: தமிழக பா.ஜ.க. முக்கிய ஆலோசனை
16 Sep 2025சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர்: மதுரை ஐகோர்ட் கருத்து
16 Sep 2025சென்னை : மதுரை ஆதீனம் விவகாரத்தில் போலீசார் பிரச்சினையை பெரிதாக்கி விட்டனர் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்தது இந்தியா
16 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றை உறுதி செய்துள்ளது இந்திய அணி.
8 அணிகள்...
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.