முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

திங்கட்கிழமை, 25 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கேரளாவில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். 25 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். கேரளாவில் கொரோனாவுக்கு தற்போது 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கண்ட தகவலை கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து