முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை செல்வன் மாமியார் மறைவு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வனின் மாமியார் மறைவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க கொள்கை பரப்பு துணை செயலாளரும், கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வைகைசெல்வனின் மாமியார் ஆறுமுகத்தாய் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.

மாமியாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் டாக்டர் வைகை செல்வனுக்கும், அவருடைய மனைவி முத்துலட்சுமிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் ஆறுமுகத்தாயின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து