முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து வரும் அமெரிக்க நிறுவனம்

புதன்கிழமை, 27 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

கான்பெரா : கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து வருவதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த உயிரி தொழில்நுட்ப நிறுவனமான நோவாவேக்ஸ், தடுப்பூசியை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசியை ஆஸ்திரேலியாவில் மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதித்து வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

மெல்போர்ன், பிரிஸ்பேன் ஆகிய நகரங்களில் முதல்கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. இதன்மூலம், இந்த ஆண்டுக்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்று அந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கிரிகோரி கிளன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து