முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பனாஜி : கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கோவா முதல்வர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊரடங்கு மே 31-ம் தேதியுடன் (நாளை ) முடிவடைகிறது. ஆனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கை முழுமையாக நீக்கக்கூடாது என்றும், கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை வேண்டுமானால் வழங்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறி உள்ளார்.  உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய போது இந்த யோசனையை தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 

ஊரடங்கை நீட்டிக்கும் அதேசமயம், மேலும் சில தளர்வுகளையும் அறிவிக்க வேண்டும். 50 சதவீத வாடிக்கையாளர்களை அனுமதித்து தனிமனித இடைவெளியை பின்பற்றி ஓட்டல்களை திறக்க அனுமதிக்க வேண்டும். இதே போல் உடற்பயிற்சி கூடங்களை திறக்க வேண்டும் என பலர் விரும்புகின்றனர் என்றும் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து