முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவில் லட்டு ஐதராபாத்தில் விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐதராபாத் : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் நேற்று முதல் தெலங்கானா மாநில தலைநகரான ஐதராபாத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனிடையே, பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்ட தலைநகர்களில் தேவஸ்தான திருமண மண்டபங்கள் அல்லது தகவல் மையங்களில் ஏழுமலையானின் லட்டு பிரசாதத்தை 50 சதவீத குறைந்த விலையில் ரூ.25-க்கு ஒரு லட்டு வீதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி ஆந்திர மாநிலத்தில் லட்டு பிரசாதத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஆனால், போக்குவரத்து காரணமாக சென்னை உட்பட மற்ற நகரங்களில் லட்டு விற்பனையை தொடங்க இயலாமல் போனது. இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு தெலுங்கானா அரசு அனுமதி வழங்கியதால், நேற்று முதல் ஐதராபாத் ஹிமாயத் நகர் தேவஸ்தான தகவல் மையத்தில் காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, வேலூர் மற்றும் கன்னியாகுமரியில் லட்டு விநியோகம் செய்ய தமிழக அரசிடம் போக்குவரத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் திருமலையிலிருந்து நேரடியாக மேற்குறிப்பிட்ட ஊர்களில் ரூ.25க்கு ஒரு லட்டு வீதம் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து