முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் வீடியோவை பகிர்ந்த மிசோரம் முதல்வர் சோரம் தங்கா

ஞாயிற்றுக்கிழமை, 31 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

ஐஸ்வால் : மிசோரமில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு வழங்கிய வீடியோவை மிசோரம் முதல்வர் சோரம் தங்கா பகிர்ந்துள்ளார்.

மிசோரம் வழியாகச் செல்லும் சிறப்பு ரயிலில் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருள்களை வழங்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. 

பெங்களூருவில் இருந்து மிசோரம் வழியாக சென்ற ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஒன்று சென்றது. அது அசாம் வழியாகச் செல்லும் போது ரயில் பாதையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் இருந்தனர். உடனடியாக ரயில் மெதுவாக சென்று கொண்டிருக்கும் போதே ரயிலினுள் இருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு பொட்டலங்களை ஜன்னல் வழியாக கொடுத்தனர்.

இதைக்கண்ட அங்கிருந்த மக்கள் உணவு பொட்டலங்களை பெற்றுக்கொண்டனர். அவர்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவுகளை வழங்கி பறிமாறிக் கொண்டனர்.சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை மிசோரம் முதல்வர் சோரம் தங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து