முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - சீனா எல்லை பிரச்சினை: மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

புதன்கிழமை, 3 ஜூன் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியா- சீனா எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் காஷ்மீர் அருகே உள்ள கிழக்கு லடாக் பகுதிக்குள், கடந்த, 5-ம் தேதி அத்துமீறி நுழைந்த சீன வீரர்களால் இரு தரப்புக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் சில வீரர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில் , சீன வீரர்கள் கிழக்கு லடாக்கிற்கு நகர்ந்துள்ளதாகவும், இந்தியாவும் நிலைமையை சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது:- இந்திய சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன வீரர்கள் யாரும் இந்தியாவுக்குள் நுழையவில்லை. எல்லையில் அதே நிலைமை தான் உள்ளது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். நெருக்கடியான நேரத்தில் மவுனம் காப்பது சரியல்ல. இந்த விவகாரத்தில் எல்லையில் என்ன தான் நடக்கிறது என மத்திய அரசு தெளிவான முடிவை வெளியிட வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து