முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 30 லட்சம்: என்.எல்.சி நிர்வாகம்

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி.யின் 2-ம் அனல் மின்நிலையத்தில் 7 அலகுகள் மூலம் 1,470 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் நேற்று பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்றும் வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சியில் நிரந்தர வேலை வழங்கப்படும்  என்று என்.எல்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து