முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வரும் 11-ம் தேதி முதல் அமெரிக்காவுக்கு 36 விமானங்கள் இயக்கம்: ஏர் இந்தியா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் 23-ம் தேதியில் இருந்து மத்திய அரசு சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்தியது. மருத்துவ பொருட்களுக்கான விமான சேவைக்கு மட்டுமே அனுமதி அளித்தது. நாட்கள் செல்ல செல்ல ஊரடங்கு முடிவுக்கு வந்தபாடில்லை. இதனால் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களின் உறவினர்கள் நீதிமன்றங்களை நாடினர். 

இதனால் மத்திய அரசு மே 6-ம் தேதியில் இருந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் சிக்கியவர்களை சிறந்த விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது.  இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஜூலை 11 முதல் 19-ம் தேதி வரை 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து