எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அச்சத்தை போக்கி மனதை வலிமைபடுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்
ஒரு நாட்டில் மன்னன் உடல் நலமில்லாமல் இருந்தார் மன்னனை குணப்படுத்த பல்வேறு நாட்டு வைத்தியர்கள் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை இறுதியில் ஒரு விகடகவி, மன்னனிடம் மன்னா என்னிடம் மருந்து ஒன்று உள்ளது. அதை நீங்கள் எனது வீட்டிற்கு தினந்தோறும் நடந்து வந்து வாங்க வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து உங்களுக்கு வேலை செய்யும் என்று கூறினர். மன்னனும் நம்பிக்கையுடன் தினந்தோறும் சென்று அந்த மருந்தை சாப்பிட்டால் இதனால் விரைவில் அவன் உடம்பு குணமானது. இது குறித்து அந்த மருத்துவரிடம் மன்னர் கேட்ட போது மன்னா அது ஒன்றுமில்லை.
உங்கள் உடலில் ஜலதோஷம் அதிகமாக இருந்தது. அதற்கு தேவையான மருந்து சுக்காகும். சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை. உங்கள் உள்ளத்தில் ஒரு அச்சம் ஒன்று இருந்தது. அந்த அச்சத்தால் எவ்வளவோ மருந்து கொடுத்தும் நீங்கள் குணமடையவில்லை.
ஆனால் இங்கு தற்போது அந்த அச்சத்தை போக்கி மனம் வலிமையுடன் வந்ததால் உங்கள் நோய் குணமானது. ஆகவே ஒரு நோயாளிக்கு மருந்து மட்டுமல்ல, மனம் வலிமை இருந்தால் தான் குணப்படுத்த முடியும் என்று கூறினான், ஆகவே நோய் தீர்வுக்கு தேவை மனம் வலிமை, தைரியம்தான் என்பது காலம் தொட்டு கூறப்பட்டு வருகிறது,
உலகை இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் உலக மக்கள் மிரண்டுள்ளனர், இந்த தொற்று நோயிலிருந்து தமிழக மக்களை காக்கும் வண்ணம் முதல்வர் இந்தியாவிற்கே வழிகாட்டும் வண்ணம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால்தான் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை பீதியடைய செய்யும் வகையிலும் மக்களின் மனதில் வலிமையை குறைக்கும் வகையிலும் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் முதல்வர் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், மனவலிமையூட்டும் வகையிலும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
அதனைத்தொடர்ந்து முதல்வரின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் இடங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ், மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று அங்கு இருக்கும் நோயாளிகளுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர்.
இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;-
நீங்கள் அனைவரும் தைரியமாகவும், மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்து மருத்துவ வசதிகளை முதல்வர் செய்து கொடுத்துள்ளார். அதே போல் சிகிச்சை பெறும் உங்களுக்கு தினந்தோறும் யோகா, மூன்று வேளையும் புரதம் நிறைந்த உணவு, மேலும் காலை மாலை இருவேளையும் பழச்சாறு மற்றும் சூப் வகைகள், பாசிப் பருப்பு, சுண்டல் உள்ளிட்ட சத்தான உணவுகள் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த நோய் வராமல் இருக்க அனைவரும் முககவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் நோயின் ஆரம்ப நிலையை கண்டறிந்து அதற்குரிய உயர் சிகிச்சை அளித்து வருவதால் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். நீங்கள் விரைவில் பூரண நலம் பெற முதல்வர் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார். அதேபோல் இந்த மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் எல்லாம் மிகவும் சிறப்புக்குரியது. நீங்கள் இறைவனுக்கு சமமானவர்கள். உங்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் நீங்கள் கேட்காமலே முதல்வர் செய்து வருகிறார்.
உங்கள் சேவையை பாராட்டி முதல்வர் எங்களை நேரடியாக அனுப்பி உங்களுக்கு தனது வாழ்த்துக்களை முதல்வர் தெரிவிக்க சொன்னார். நீங்கள் மனம் வலிமையுடன் நிற்க வேண்டும். இந்த நோய் என்பது தொற்று நோயாகும். நீங்கள் தினந்தோறும் நோயாளியை சந்திக்கும் பொழுது உடல் முழுக்க கவசங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து மாத்திரை நீங்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து அம்மா பேரவை சார்பில் கொரானா நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர் களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி பகுதிகளான யாகப்பா நகர், தாசில்தார் நகர் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் முதல்வர் ஆணைக்கிணங்க நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை நிலையங்கள், மற்றும் வீடு வீடாக நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் முகாம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து அதன் பின் மக்களிடத்தில் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது,
முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோயைப் பற்றி எதிர்க்கட்சிகள் கூறி வரும் விஷம பிரசாரத்தை நம்ப வேண்டாம். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். மனம் வலிமையுடன் இருக்க வேண்டும்.
மதுரையில் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் நான்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்வார்கள். தற்போது ஒரு அறிகுறி இருந்தாலே முதல்வர் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். மதுரையில் 95 காய்ச்சல் முகாம்கள் உள்ளன. தற்போது மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அதே போல் மதுரையில் 8,433 தெருக்களில் 1625 நோய் உள்ள பகுதிகளை தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நுண்கிருமி தான். இந்த கிருமியை ஆரம்ப நிலையை கண்டுபிடித்துவிட்டால் உடனடியாக குணப்படுத்தி விடலாம். யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.
விவசாய கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் என்பவர் கூறியதாவது,
நான் கடந்த ஒரு வாரம் முன்பு வந்தேன். தற்பொழுது எனது நோய் முற்றிலும் குணமடைந்து விட்டது. இங்கு காலையில் யோகா கற்றுத் தருகிறார்கள். அதே போல் சரியான முறையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால் முதல்வர் இதுபோன்று எடுத்து வரும் நடவடிக்கையால் எனக்கு பயமே போய் விட்டது. ஆகவே எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் வரப்பிரசாதமாக திகழ்கிறார் என்று கூறினார்.
காய்ச்சல் முகாமில் பங்கேற்ற பெண்மணி மும்தாஜ் கூறியதாவது,
ஆரம்பத்தில் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம். ஆனால் தற்பொழுது முதல்வர் ஒவ்வொரு வீடாக சென்று நோயை கண்டறிய எங்கள் இல்லம் தேடி அரசின் சார்பில் மருத்துவ குழுவை அனுப்பி உள்ளார். இதன் மூலம் நோய் தெரியாமல் இருப்பவர்கள் எளிதில் கண்டறியப்படும். அதுமட்டுமல்லாது முதல்வர் வழங்கியுள்ள அறிவுரைகளை எங்களுக்கு அமைச்சர் வழங்கினார்.
இதன்மூலம் எனக்கு அச்சம் நீங்கி விட்டது. முதல்வரின் அறிவுரைகளான முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். இதை கடைபிடித்தாலே போதும். இந்த நோய் என்பது நம்மை அண்டாது என்று கூறியது எனக்கு முழு நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறினார்
தோப்பூரில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர் கூறியதாவது,
இந்த புனித பொறுப்பிலிருக்கும் எங்களுக்கு முதல்வர் தெரிவித்த வாழ்த்துக்களை அமைச்சர் கூறிய பொழுது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமல்லாது எங்களுக்கு மூன்று வேளை உணவும், தொடர்ந்து பாதுகாப்பு கவசம் வழங்கி எங்களின் உடல்நிலையில் அக்கறை கொண்டு எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து தற்போது எங்களுக்கு மனம் வலிமையுடன் இருக்க அறிவுரை வழங்கி வரும் முதல்வருக்கு ஒட்டுமொத்த மருத்துவ பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 18 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 19 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் படங்களுக்கு மலர்கள் தூவி பிரதமர் அஞ்சலி
18 Mar 2024கோவை, கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. நாமக்கல் தொகுதி வேட்பாளர் பெயர் அறிவிப்பு
18 Mar 2024சென்னை, தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காமி விமர்சனம்
18 Mar 2024நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேர
-
காடுவெட்டி விமர்சனம்
18 Mar 2024கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும்
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி: புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
18 Mar 2024புதுடெல்லி, ரஷ்ய கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக என்னுடைய வாழ்த்துகள் என பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
மேற்குவங்க மாநில டி.ஜி.பி. மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி : மேற்கு வங்க டி.ஜி.பி. ராஜீவ்குமார் மற்றும் 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்றி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ரோமியோ இசை வெளியீடு
18 Mar 2024அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார்.
-
அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
பிரேமலு விமர்சனம்
18 Mar 2024கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார்.
-
மதுபான கொள்கை வழக்கில் கைது: சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி : மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வரும் 21-ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவலையும் வெளியிட வேண்டும்: எஸ்.பி.ஐ. வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Mar 2024புதுடெல்லி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எஸ்.பி.ஐ.
-
திருப்பூரில் சுப்புராயன், நாகையில் செல்வராஜ்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
அ.தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி உறுதியானது?
18 Mar 2024சென்னை : அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. கூட்டணி உறுதியானதாகவும், நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கா இசை வெளியீடு
18 Mar 2024நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, தற்போது நடித்து வரும் 'கா' படத்தில் வனவிலங்கு புகைப்பட கலைஞராக நடித்து வரும் நிலையில், இம்மாதம் வெளியாக உள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
-
மகளிர் ஐ.பி.எல்.லில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி.
18 Mar 2024புதுடெல்லி : மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
-
அணியுடன் இணைந்தார் கோலி
18 Mar 20242024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.