எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (14.7.2020) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான 217 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 31 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் மற்றும் 2 அலுவலகக் கட்டிடங்களையும் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகி வரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட, காஞ்சிபுரம் முதல் வந்தவாசி (மாநில நெடுஞ்சாலை 116) கிலோ மீட்டர் 14/300-36/700 மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு (மாநில நெடுஞ்சாலை 58) கிலோ மீட்டர் 0/0-26/811 வரையிலும், 217 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை தமிழக முதல்வர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் - மழவராயநல்லூர் சாலையில், எழுமூரில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கொளக்காநத்தம் - சிறுகன்பூர் சாலையில், கொளக்காநத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், பெருமநாடு - கொன்னையூர் சாலையில் பிரிந்து ஆத்தங்காடு - திருநட்டாம்பட்டி சாலையில், ஆத்தங்காட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருமயம் வட்டம், திருமயத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குளத்தூர் வட்டம், கீரனூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டிடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், குரவப்புலம் - கருப்பம்புலம் கடினல்வயல் சாலையில், கருப்பம்புலத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பஞ்சநதிக்குளம் நடுசேத்தி சாலையில், மருதூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆயக்காரன்புலம் - பன்னாள் சாலையில், ஆயக்காரன்புலத்தில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், குறவன்குளம் சாலையில் குறவன்குளத்தில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பெரும்செல்வவிளை சாலையில், பெரும்செல்வவிளையில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கயத்தார் - கழுகுமலை சாலையில், தெற்கு இலந்தைகுளத்தில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விளாத்திக்குளம் வட்டம், புதூர்- பரளச்சி சாலையில், வன்னிப்பட்டியில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எட்டயபுரம் வட்டம், மீனாட்சிபுரம் - வெங்கடாசலபுரம் சாலையில் வெங்கடாசலபுரத்தில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள்,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன்கோவில் - வீரசிகாமணி சாலையில், தளவாய்புரத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையில் பிரிந்து செல்லும் கரிசல்குளம் சாலை (வழி) ரெட்டியபட்டி - பந்தப்புளி சாலையில், கிலோ மீட்டர் 1/10-ல் பந்தப்புளியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் கிலோ மீட்டர் 4/6-ல் கரிசல்குளத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாங்குடி சாலையில் மாங்குடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரிவலம்வந்தநல்லூர் - உள்ளார் சாலையில், கரிவலம்வந்தநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி - கொளக்கட்டாகுறிச்சி சாலையில், நடுவப்பட்டியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகிரி வட்டம், அம்மன்குளம் காட்டூர் சாலையிலிருந்து நெற்கட்டும்செவல் வரை செல்லும் சாலையில், தலைவன்கோட்டையில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் ராயகிரி - மேற்கு தொடர்ச்சி மலை சாலையில், உள்ளாரில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடையநல்லூர் வட்டம், நகரம் - சங்கரன்கோவில் சாலையில், வடமலாபுரத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 9 பாலங்கள் என மொத்தம் 248 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை மற்றும் 2 அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், குரோம்பேட்டை, இராதா நகரில் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 27-க்கு மாற்றாக ரயில்வே கி.மீ. 25/3-4ல் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைக்கு தமிழக முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
விர்ஜீனியா மாகாண வழக்கறிஞராக லிண்ட்சேவை நியமித்தார் அமெரிக்க அதிபர்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ட்ரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு நாட்டு முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
-
தாலிபான்கள் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்: ட்ரம்ப்
21 Sep 2025நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.