எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (14.7.2020) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட காஞ்சிபுரம் முதல் வந்தவாசி வரை மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு வரையிலான 217 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 31 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள் மற்றும் 2 அலுவலகக் கட்டிடங்களையும் திறந்து வைத்து, செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகி வரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், உத்திரமேரூர், வந்தவாசி, வெம்பாக்கம், செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டங்களுக்குட்பட்ட, காஞ்சிபுரம் முதல் வந்தவாசி (மாநில நெடுஞ்சாலை 116) கிலோ மீட்டர் 14/300-36/700 மற்றும் சட்ராஸ் முதல் செங்கல்பட்டு (மாநில நெடுஞ்சாலை 58) கிலோ மீட்டர் 0/0-26/811 வரையிலும், 217 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட சாலையை தமிழக முதல்வர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் - மழவராயநல்லூர் சாலையில், எழுமூரில் ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கொளக்காநத்தம் - சிறுகன்பூர் சாலையில், கொளக்காநத்தத்தில் ஒரு கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், பெருமநாடு - கொன்னையூர் சாலையில் பிரிந்து ஆத்தங்காடு - திருநட்டாம்பட்டி சாலையில், ஆத்தங்காட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருமயம் வட்டம், திருமயத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், குளத்தூர் வட்டம், கீரனூரில் 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 உட்கோட்டம் மற்றும் பிரிவு அலுவலகக் கட்டிடங்கள், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், குரவப்புலம் - கருப்பம்புலம் கடினல்வயல் சாலையில், கருப்பம்புலத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், பஞ்சநதிக்குளம் நடுசேத்தி சாலையில், மருதூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆயக்காரன்புலம் - பன்னாள் சாலையில், ஆயக்காரன்புலத்தில் 2 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், குறவன்குளம் சாலையில் குறவன்குளத்தில் ஒரு கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், பெரும்செல்வவிளை சாலையில், பெரும்செல்வவிளையில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கயத்தார் - கழுகுமலை சாலையில், தெற்கு இலந்தைகுளத்தில் 3 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விளாத்திக்குளம் வட்டம், புதூர்- பரளச்சி சாலையில், வன்னிப்பட்டியில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், எட்டயபுரம் வட்டம், மீனாட்சிபுரம் - வெங்கடாசலபுரம் சாலையில் வெங்கடாசலபுரத்தில் ஒரு கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 3 பாலங்கள்,
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், சங்கரன்கோவில் - வீரசிகாமணி சாலையில், தளவாய்புரத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இராஜபாளையம் - சங்கரன்கோவில் - திருநெல்வேலி சாலையில் பிரிந்து செல்லும் கரிசல்குளம் சாலை (வழி) ரெட்டியபட்டி - பந்தப்புளி சாலையில், கிலோ மீட்டர் 1/10-ல் பந்தப்புளியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் கிலோ மீட்டர் 4/6-ல் கரிசல்குளத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், மாங்குடி சாலையில் மாங்குடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கரிவலம்வந்தநல்லூர் - உள்ளார் சாலையில், கரிவலம்வந்தநல்லூரில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், திருவேங்கடம் வட்டம், நடுவப்பட்டி - கொளக்கட்டாகுறிச்சி சாலையில், நடுவப்பட்டியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சிவகிரி வட்டம், அம்மன்குளம் காட்டூர் சாலையிலிருந்து நெற்கட்டும்செவல் வரை செல்லும் சாலையில், தலைவன்கோட்டையில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் ராயகிரி - மேற்கு தொடர்ச்சி மலை சாலையில், உள்ளாரில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கடையநல்லூர் வட்டம், நகரம் - சங்கரன்கோவில் சாலையில், வடமலாபுரத்தில் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 9 பாலங்கள் என மொத்தம் 248 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 பாலங்கள், மேம்படுத்தப்பட்ட சாலை மற்றும் 2 அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், குரோம்பேட்டை, இராதா நகரில் 28 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே கடவு எண் 27-க்கு மாற்றாக ரயில்வே கி.மீ. 25/3-4ல் கட்டப்படவுள்ள வரையறுக்கப்பட்ட வாகன சுரங்கப்பாதைக்கு தமிழக முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பென்ஜமின், தலைமைச் செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ், தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
த.வெ.க. புதிய நிர்வாகக்குழு அறிவிப்பு
28 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் ஆய்வு
28 Oct 2025சென்னை : சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
-
குகேஷ் தரமான பதிலடி
28 Oct 2025அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
-
பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
28 Oct 2025பாட்னா : பீகாரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இன்டியா கூட்டணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: கவனிக்க வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
28 Oct 2025சென்னை : தமிழகத்தில் ‘எஸ்.ஐ.ஆர்.’ என்று சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்குவதால் 6 முக்கிய அம்சங்களை கவனிக்க வேண்டி உள்ளது.
-
தே.ஜ. கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தல்
28 Oct 2025பாட்னா : பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும் என்று தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
-
மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது
28 Oct 2025சென்னை : மோந்தா புயல் ஆந்திராவுக்கு 50 கி.மீ. தொலைவில் நெருங்கியது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிக்கு அனுமதியா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
28 Oct 2025சென்னை : பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவு; முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
28 Oct 2025சென்னை : திரு.வி.க. நகர் எம்.எல்.ஏ.வின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
-
இரு மாநிலங்களில் வாக்காளர் அட்டை: பிரசாந்த் கிஷோருக்கு நோட்டீஸ்
28 Oct 2025பாட்னா : இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் விவகாரத்தில் பிரசாந்த் கிஷோர் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
28 Oct 2025புதுடெல்லி : தகவல் ஆணையர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஐ.சி.சி. பேட்டிங் தரவரிசை: ஸ்மிருதி தொடர்ந்து முதலிடம்
28 Oct 2025துபாய் : இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஐ.சி.சி.
-
பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை: ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து சூர்யகுமார் தகவல்
28 Oct 2025சிட்னி : ஷ்ரேயாஸ் ஐயர் உடல் நலம் குறித்து பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்றும் தற்போது உடல் நிலை சீராக உள்ளதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
சித்தராமையாவின் வார்த்தையே இறுதியானது: முதல்வர் மாற்றம் குறித்த கேள்விக்கு துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பதில்
28 Oct 2025பெங்களூரு : கர்நாடக முதல்வர் மாற்றம் மற்றும் மாநில அமைச்சரவை மாற்றம் குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் சித்தராமையாவின்
-
மகளிர் உலக கோப்பை முதல் அரையிறுதி: இங்கி., - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
28 Oct 2025கவுகாத்தி : 13-வது ஐ.சி.சி.
-
ஆஸி.,க்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் துவங்குமா இந்தியா? _ கான்பெராவில் இன்று முதல் போட்டி
28 Oct 2025கான்பெரா : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி-20 தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி என்ற ஆவல் இந்திய ரசிகர்கள் இடையே எழுந்துள்ள நிலையில் முதல் போட்டி இன்று கான்பெராவில் ந
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


