முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: தமிழக அரசு

சனிக்கிழமை, 25 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரேஷன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை சார்பில் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், மற்ற பணியாளர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் போதுமான முகக்கவசம், கையுறை இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த மண்டல பதிவாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து