முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.  

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஈரோடு மாவட்டம் மற்றும் வட்டம், சூரியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மகன் செந்தில் எதிர்பாராத விதமாக  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த  சுப்பையன் மகன் மாரிமுத்து  விசைப்படகினை சரி செய்யும் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம்,  வெண்டையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்  மகள் செல்வி காமாட்சி தனது வீட்டின் அருகில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், கழுகேர்கடை      கிராமத்தைச் சேர்ந்த அபுதாகீர் மகன் சாதிக் அலி படிக்கட்டில் இறங்கி வரும் போது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பியில் கைப்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், நெமிலி கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் ராஜன் என்கிற ராஜா மற்றும் கணேசன் மகன் ஆறுமுகம் எதிர்பாராத விதமாக மின்வேலியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்  என்ற செய்தியையும், 

 பள்ளிப்பட்டு வட்டம், கொளத்தூர் துணைமின் நிலையத்தில் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த ஆஞ்சிகான் மகன் முனுசாமி மின் கம்பத்தில், பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜெகதளா கிராமத்தைச் சேர்ந்த சசிக்குமார் மகன் செல்வன் பிரவீன் விளையாடிக்கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  குன்னூர் வட்டம், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த அமாவாசை மகள் செல்வி மங்கம்மா துணியினை உலர்த்த முற்படும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், 

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த யசோதாவின் கணவர் பாபு பட்டறையில்  பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சீனுவாசன் மகன் சிறுவன் சிபிராஜ் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்து மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். 

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11  நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து