முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் சுதந்திர தினவிழா: எளிமையாக கொண்டாட தமிழக கல்வித்துறை உத்தரவு

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவினை அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து கல்வி அலுவலகங்கள், அனைத்து வகை பள்ளிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடவேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-  

நாட்டின் 74-வது சுதந்திர தினவிழாவினை வருகிற 15-ம் தேதியன்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து கல்வி அலுவலகங்கள், அனைத்துவகை பள்ளிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடவேண்டும். 

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் முன்களப்பணியாளர்களாக செயல்படும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் சேவையினை பாராடும் பொருட்டு அவர்களை சுதந்திர தினவிழாவுக்கு அழைத்து சிறப்பிக்க வேண்டும். அதே போல், கொரோனா தொற்று ஏற்பட்டு தற்போது பூரண குணம் அடைந்தவர்களையும் விழாவுக்கு அழைக்கலாம். 

இந்த விழாவில் சமூக இடைவெளியை பின்பற்றுவதோடு, முகக்கவசம் அணிந்து, கூட்டங்களை தவிர்க்க வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து