முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியுரிமை திருத்த சட்ட விதிகளை உருவாக்க 3 மாத அவகாசம் வேண்டும் : மத்திய உள்துறை அமைச்சகம் கேட்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஆறு மாத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், விதிகளை உருவாக்க அவகாசம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

 

இந்திய பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.

இது ஒரு மதத்தினற்கு எதிரான மசோதா என்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது என்றாலும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதால் சட்டமாக நிறைவேறியது.

ஜனாதிபதி டிசம்பர் மாதம் 12-ம் தேதி ஒப்புதல் வழங்கினார்.  ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதில் இருந்து ஆறு மாதத்திற்குள் அதற்கான விதிகள் உருவாக்கப்பட்டு உள்துறை அமைச்சகம் மூலம் அந்த துறையின் நிலைக்குழுவிற்கு அனுப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை விதிகள் உருவாக்கப்படவில்லை.

இதனால் உள்துறை அமைச்சகம் சார்பில் மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2014-ம் ஆண்டு 31-ம் தேதி வரை மூன்று நாடுகளிலும் இருந்து வந்த மைானரிட்டிகள் இந்தியாவில் வாழ்ந்து வந்தால் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறிவர்களாக கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதை இந்த மசோதா வலியுறுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து