முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவை எதிர்த்து போராடுவதில் இந்தியா பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது: அதிபர் டிரம்ப் சொல்கிறார்

புதன்கிழமை, 5 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : இந்தியா கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கொரோனா வைரஸ் விவகாரத்தை கையாளுவதில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. 

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா சிறப்பாக செயல்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம் இந்தியா இந்த வைரசை எதிர்த்துப் போராடுவதில் மிகப்பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். இந்தியா மற்றும் சீனாவைவிட நாங்கள் பெரியவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

மற்ற நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அமெரிக்காவில் இதுவரை 6 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேறு எந்த நாடும் இதை செய்யவில்லை எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து