எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை 3000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு நவம்பர் மாதம் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஆக.11) பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களுக்கு நன்றி. கொரோனா பரிசோதனை, தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல், நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்டவற்றை பலப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களில் கூறி வருகிறேன். இதுதொடர்பாக கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளேன்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேநேரத்தில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பொருளாதாரத்தை சீர்படுத்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறோம். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் அரசு சார்பாக 61 மற்றும் தனியார் சார்பாக 69 என மொத்தம் 130 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பரிசோதனைகளுக்கு நாளொன்றுக்கு ஆகும் செலவு ரூ. 5 கோடி. இந்த செலவில் 50 சதவீதத்தை பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்நாள் வரை 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 2,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைவான இறப்பு விகிதத்தைத் தமிழ்நாடு கடைபிடித்து வருகிறது. இறப்பு விகிதம் 1.6 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே குறைந்த அளவில் உள்ளது.
இந்நாள் வரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 80.8 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர், ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ ஆலோசனையின்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வழங்கப்படுகின்றன. கோவிட் மருத்துவமனைகள், கோவிட் ஹெல்த் மையங்கள், கோவிட் கேர் மையங்களில் உள்ள படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
இதில், கோவிட் மருத்துவமனைகளில் 33 ஆயிரத்து 576 படுக்கைகளும், கோவிட் ஹெல்த் மையங்களில் 22 ஆயிரத்து 873 படுக்கைகளும் கோவிட் கேர் மையங்களில் 72 ஆயிரத்து 575 படுக்கைகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 630 வென்டிலேட்டர்களுடன் மொத்தமாக 4,147 வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன.
பி.எம். கேர்ஸ் நிதி மூலமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு வென்டிலேட்டர்களை வழங்குகின்றன. உடல்நிலை மோசமாக உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உதவி அதிகம் தேவைப்படுவதாக நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அதிகளவில் வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மற்ற உபகரணங்களை கொள்முதல் செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பட்ஜெட்டிலிருந்து போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு முகக்கவசங்களுக்காக ரூ.5.25 கோடி, என்-95 முகக்கவசங்களுக்காக 48.05 லட்சம், பி.பி.இ. பாதுகாப்பு உடைகளுக்காக 41.3 லட்சம், ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை கிட்டுகளுக்காக 43.26 லட்சம் மதிப்பிலான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவசர நிலையை கையாள 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள், 1,058 லேப் டெக்னீஷியன்கள், 334 சுகாதார ஆய்வாளர்கள், 2,751 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 2,000 பாரா மெடிக்கல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி வீடுதோறும் கண்காணிப்பு செய்து வருகிறது. தினந்தோறும் 550 காய்ச்சல் மையங்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 33 ஆயிரம் காய்ச்சல் மையங்கள் மூலம் 17 லட்சம் மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 34 நிரந்தர மற்றும் 10 நடமாடும் மாதிரிகளை சேகரிக்கும் மையங்களை அமைத்துள்ளோம். இதுவரை 8 லட்சம் ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 ஆயிரம் களப்பணியாளர்கள், 93 என்.ஜி.ஓ.க்கள், 2,700 தன்னார்வலர்கள் மூலம் அறிகுறியுள்ள தொற்றாளர்கள் கண்டறியப்பட்டும்,
எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 6 அமைச்சர்களையும் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நியமித்துள்ளேன். இதனால், சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதே நடவடிக்கைகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மேற்கொள்கிறோம்.
47 லட்சம் குடிசைவாழ் பகுதி மக்களுக்கு மறுபடியும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை விநியோகித்துள்ளோம். அதன் பயன்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. மேலும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 4.5 கோடி முகக்கவசங்களை விநியோகிக்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன, விநியோகமும் தொடங்கப்பட்டுள்ளது.
இலவச அரிசி மற்றும் முழு கொண்டலைக் கடலையை இலவசமாக வழங்குவதற்கு கால அளவை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு மக்களின் உணவு முறையில் முழு கொண்டைக் கடலை பிரதானமான உணவுப்பொருளாக இல்லை. எனவே, தமிழகத்திற்கு நவம்பர் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு முழு செலவை ஏற்றுக் கொண்டு 3.77 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களை 253 ரயில்களில் அனுப்பி வைத்துள்ளது.
இதுநாள் வரை 60 ஆயிரத்து 875 பயணிகள் வந்தே பாரத் மற்றும் சமுத்ரா சேது மிஷன் திட்டங்கள் மூலமும், தனியார் விமானங்கள் மூலமும் தமிழகத்திற்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட கருவிகள் மற்றும் மருந்துகளை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நான் சிறப்பு ஊக்க தொகுப்பினை அறிவித்துள்ளேன்.
தற்போது வரை 50 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் வேளாண் தொழில், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உட்பட அனைத்துத் தொழில் நிறுவனங்களும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில், மாநிலத்தில் பொருளாதாரத்தை சீர்படுத்த உயர் மட்ட குழு அமைத்துள்ளேன். அவசர உத்தரவாத கடன் வரி உள்ளிட்ட திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக அறிவித்ததற்கு நன்றி. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதிகப்படியான கடன் வழங்க வலியுறுத்தியுள்ளேன்.
இதுவரை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 841 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5,329 கோடி ரூபாய் அளவில் கடன்கள் வழங்கியுள்ளோம். மேலும் பிரதமரிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 712.64 கோடி ரூபாயில், 512.64 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளோம். எனது முந்தைய வேண்டுகோளின்படி தமிழகத்திற்கான இந்த தொகுப்பை 3,000 கோடி ரூபாய் வரை உயர்த்த கோருகிறேன்.
மத்திய மற்றும் மாநில வரி வருவாய், பட்ஜெட் மதிப்பீடுகளுக்குக் குறைவாக இருக்கும். பற்றாக்குறையை ஈடுசெய்ய, கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் சிறப்பு மானியம் ஒதுக்கக் கோருகிறேன்.
ஏப்ரல்-ஜூன், 2020-க்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும். தொற்றுநோயை எதிர்த்துப் போராட உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய் மானியம் கோருகிறேன்.
இந்த நேரத்தில் 1,321 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள சி.எம்.ஆர். மானியத்தை வெளியிடுவது, நெல் கொள்முதல் செய்ய உதவும். மின் துறையில் உடனடி சுமையை குறைக்க நிவாரணத் தொகுப்பை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோவிட் சூழ்நிலையில், பல்வேறு வெளிப்புற நிதி நிறுவனங்களுக்காக எனது அரசு இந்திய அரசுக்கு பல வெளிப்புற உதவித் திட்டங்களை முன்மொழிந்துள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட இந்திய அரசு நிறுவனங்களின் ஆரம்ப ஒப்புதல் விரைவான விநியோகத்தை செயல்படுத்த உதவும், இது பரந்த பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளுக்கு பங்களிக்கும்.
ரிசர்வ் வங்கியின் சிறப்புத் தொகுப்புகளில் இருந்து தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழக நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் மறுநிதியளிப்பு வசதியாக வழங்குமாறு எஸ்.ஐ.டி.பி.ஐ.க்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களை புதுப்பிக்க உதவும். சுய உதவிக் குழுக்களுக்கான கோவிட் -19 க்கான சிறப்பு கடன் தயாரிப்பு அனைத்து வங்கிகளாலும் ஒரு குழுவுக்குக் குறைந்தது 2 லட்சம் ரூபாய்க்கு மேம்பட்ட கடன் தொகையும், மேம்பட்ட வட்டி அடக்கமும் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
மேம்பட்ட முன்பண வட்டி ஒழிப்புக்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் வகை -1 இல் கொண்டு வர வேண்டும் சுய உதவிக் குழுக்களுக்கு இந்திய அரசு உத்தரவாதத்துடன் மேம்படுத்தப்பட்ட மொத்த கடன்களின் சி.ஜி.எப்.எம்.யூ. திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்,
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து நிலை கூட்டமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இறுதி முடிவு 24-ம் தேதி வெளியீடு
17 Sep 2025சென்னை, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடக்கிறது.