எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை 3000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு நவம்பர் மாதம் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஆக.11) பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களுக்கு நன்றி. கொரோனா பரிசோதனை, தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல், நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்டவற்றை பலப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களில் கூறி வருகிறேன். இதுதொடர்பாக கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளேன்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேநேரத்தில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பொருளாதாரத்தை சீர்படுத்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறோம். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் அரசு சார்பாக 61 மற்றும் தனியார் சார்பாக 69 என மொத்தம் 130 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பரிசோதனைகளுக்கு நாளொன்றுக்கு ஆகும் செலவு ரூ. 5 கோடி. இந்த செலவில் 50 சதவீதத்தை பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்நாள் வரை 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 2,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைவான இறப்பு விகிதத்தைத் தமிழ்நாடு கடைபிடித்து வருகிறது. இறப்பு விகிதம் 1.6 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே குறைந்த அளவில் உள்ளது.
இந்நாள் வரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 80.8 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர், ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ ஆலோசனையின்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வழங்கப்படுகின்றன. கோவிட் மருத்துவமனைகள், கோவிட் ஹெல்த் மையங்கள், கோவிட் கேர் மையங்களில் உள்ள படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
இதில், கோவிட் மருத்துவமனைகளில் 33 ஆயிரத்து 576 படுக்கைகளும், கோவிட் ஹெல்த் மையங்களில் 22 ஆயிரத்து 873 படுக்கைகளும் கோவிட் கேர் மையங்களில் 72 ஆயிரத்து 575 படுக்கைகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 630 வென்டிலேட்டர்களுடன் மொத்தமாக 4,147 வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன.
பி.எம். கேர்ஸ் நிதி மூலமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு வென்டிலேட்டர்களை வழங்குகின்றன. உடல்நிலை மோசமாக உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உதவி அதிகம் தேவைப்படுவதாக நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அதிகளவில் வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மற்ற உபகரணங்களை கொள்முதல் செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பட்ஜெட்டிலிருந்து போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு முகக்கவசங்களுக்காக ரூ.5.25 கோடி, என்-95 முகக்கவசங்களுக்காக 48.05 லட்சம், பி.பி.இ. பாதுகாப்பு உடைகளுக்காக 41.3 லட்சம், ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை கிட்டுகளுக்காக 43.26 லட்சம் மதிப்பிலான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவசர நிலையை கையாள 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள், 1,058 லேப் டெக்னீஷியன்கள், 334 சுகாதார ஆய்வாளர்கள், 2,751 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 2,000 பாரா மெடிக்கல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி வீடுதோறும் கண்காணிப்பு செய்து வருகிறது. தினந்தோறும் 550 காய்ச்சல் மையங்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 33 ஆயிரம் காய்ச்சல் மையங்கள் மூலம் 17 லட்சம் மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 34 நிரந்தர மற்றும் 10 நடமாடும் மாதிரிகளை சேகரிக்கும் மையங்களை அமைத்துள்ளோம். இதுவரை 8 லட்சம் ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 ஆயிரம் களப்பணியாளர்கள், 93 என்.ஜி.ஓ.க்கள், 2,700 தன்னார்வலர்கள் மூலம் அறிகுறியுள்ள தொற்றாளர்கள் கண்டறியப்பட்டும்,
எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 6 அமைச்சர்களையும் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நியமித்துள்ளேன். இதனால், சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதே நடவடிக்கைகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மேற்கொள்கிறோம்.
47 லட்சம் குடிசைவாழ் பகுதி மக்களுக்கு மறுபடியும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை விநியோகித்துள்ளோம். அதன் பயன்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. மேலும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 4.5 கோடி முகக்கவசங்களை விநியோகிக்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன, விநியோகமும் தொடங்கப்பட்டுள்ளது.
இலவச அரிசி மற்றும் முழு கொண்டலைக் கடலையை இலவசமாக வழங்குவதற்கு கால அளவை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு மக்களின் உணவு முறையில் முழு கொண்டைக் கடலை பிரதானமான உணவுப்பொருளாக இல்லை. எனவே, தமிழகத்திற்கு நவம்பர் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு முழு செலவை ஏற்றுக் கொண்டு 3.77 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களை 253 ரயில்களில் அனுப்பி வைத்துள்ளது.
இதுநாள் வரை 60 ஆயிரத்து 875 பயணிகள் வந்தே பாரத் மற்றும் சமுத்ரா சேது மிஷன் திட்டங்கள் மூலமும், தனியார் விமானங்கள் மூலமும் தமிழகத்திற்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட கருவிகள் மற்றும் மருந்துகளை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நான் சிறப்பு ஊக்க தொகுப்பினை அறிவித்துள்ளேன்.
தற்போது வரை 50 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் வேளாண் தொழில், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உட்பட அனைத்துத் தொழில் நிறுவனங்களும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில், மாநிலத்தில் பொருளாதாரத்தை சீர்படுத்த உயர் மட்ட குழு அமைத்துள்ளேன். அவசர உத்தரவாத கடன் வரி உள்ளிட்ட திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக அறிவித்ததற்கு நன்றி. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதிகப்படியான கடன் வழங்க வலியுறுத்தியுள்ளேன்.
இதுவரை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 841 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5,329 கோடி ரூபாய் அளவில் கடன்கள் வழங்கியுள்ளோம். மேலும் பிரதமரிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 712.64 கோடி ரூபாயில், 512.64 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளோம். எனது முந்தைய வேண்டுகோளின்படி தமிழகத்திற்கான இந்த தொகுப்பை 3,000 கோடி ரூபாய் வரை உயர்த்த கோருகிறேன்.
மத்திய மற்றும் மாநில வரி வருவாய், பட்ஜெட் மதிப்பீடுகளுக்குக் குறைவாக இருக்கும். பற்றாக்குறையை ஈடுசெய்ய, கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் சிறப்பு மானியம் ஒதுக்கக் கோருகிறேன்.
ஏப்ரல்-ஜூன், 2020-க்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும். தொற்றுநோயை எதிர்த்துப் போராட உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய் மானியம் கோருகிறேன்.
இந்த நேரத்தில் 1,321 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள சி.எம்.ஆர். மானியத்தை வெளியிடுவது, நெல் கொள்முதல் செய்ய உதவும். மின் துறையில் உடனடி சுமையை குறைக்க நிவாரணத் தொகுப்பை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோவிட் சூழ்நிலையில், பல்வேறு வெளிப்புற நிதி நிறுவனங்களுக்காக எனது அரசு இந்திய அரசுக்கு பல வெளிப்புற உதவித் திட்டங்களை முன்மொழிந்துள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட இந்திய அரசு நிறுவனங்களின் ஆரம்ப ஒப்புதல் விரைவான விநியோகத்தை செயல்படுத்த உதவும், இது பரந்த பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளுக்கு பங்களிக்கும்.
ரிசர்வ் வங்கியின் சிறப்புத் தொகுப்புகளில் இருந்து தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழக நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் மறுநிதியளிப்பு வசதியாக வழங்குமாறு எஸ்.ஐ.டி.பி.ஐ.க்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களை புதுப்பிக்க உதவும். சுய உதவிக் குழுக்களுக்கான கோவிட் -19 க்கான சிறப்பு கடன் தயாரிப்பு அனைத்து வங்கிகளாலும் ஒரு குழுவுக்குக் குறைந்தது 2 லட்சம் ரூபாய்க்கு மேம்பட்ட கடன் தொகையும், மேம்பட்ட வட்டி அடக்கமும் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
மேம்பட்ட முன்பண வட்டி ஒழிப்புக்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் வகை -1 இல் கொண்டு வர வேண்டும் சுய உதவிக் குழுக்களுக்கு இந்திய அரசு உத்தரவாதத்துடன் மேம்படுத்தப்பட்ட மொத்த கடன்களின் சி.ஜி.எப்.எம்.யூ. திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்,
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து நிலை கூட்டமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.