எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகத்திற்கு கொரோனா தடுப்பு நிதியை 3000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு நவம்பர் மாதம் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஆக.11) பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களுக்கு நன்றி. கொரோனா பரிசோதனை, தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல், நோயாளிகளுக்கு சிகிச்சை உள்ளிட்டவற்றை பலப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.க்களுடன் தொடர் ஆலோசனைக் கூட்டங்களில் கூறி வருகிறேன். இதுதொடர்பாக கண்காணிக்க அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்துள்ளேன்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதேநேரத்தில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, பொருளாதாரத்தை சீர்படுத்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகிறோம். நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தில் அரசு சார்பாக 61 மற்றும் தனியார் சார்பாக 69 என மொத்தம் 130 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளுக்கு சராசரியாக 65 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பரிசோதனைகளுக்கு நாளொன்றுக்கு ஆகும் செலவு ரூ. 5 கோடி. இந்த செலவில் 50 சதவீதத்தை பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்நாள் வரை 32 லட்சத்து 92 ஆயிரத்து 958 மாதிரிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்து 2,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை 53 ஆயிரத்து 99 பேர் சிகிச்சையில் உள்ளனர். குறைவான இறப்பு விகிதத்தைத் தமிழ்நாடு கடைபிடித்து வருகிறது. இறப்பு விகிதம் 1.6 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே குறைந்த அளவில் உள்ளது.
இந்நாள் வரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 675 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 80.8 சதவீதம் என்ற அளவில் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. 37 மாவட்டங்களில் 36 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து முன்கள பணியாளர்களுக்கும் கபசுரக் குடிநீர், ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ ஆலோசனையின்படி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் வழங்கப்படுகின்றன. கோவிட் மருத்துவமனைகள், கோவிட் ஹெல்த் மையங்கள், கோவிட் கேர் மையங்களில் உள்ள படுக்கை வசதிகள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
இதில், கோவிட் மருத்துவமனைகளில் 33 ஆயிரத்து 576 படுக்கைகளும், கோவிட் ஹெல்த் மையங்களில் 22 ஆயிரத்து 873 படுக்கைகளும் கோவிட் கேர் மையங்களில் 72 ஆயிரத்து 575 படுக்கைகளும் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 630 வென்டிலேட்டர்களுடன் மொத்தமாக 4,147 வென்டிலேட்டர் வசதிகள் உள்ளன.
பி.எம். கேர்ஸ் நிதி மூலமாக மத்திய அரசு மாநிலங்களுக்கு வென்டிலேட்டர்களை வழங்குகின்றன. உடல்நிலை மோசமாக உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வென்டிலேட்டர் உதவி அதிகம் தேவைப்படுவதாக நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, அதிகளவில் வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். மற்ற உபகரணங்களை கொள்முதல் செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பட்ஜெட்டிலிருந்து போதுமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு முகக்கவசங்களுக்காக ரூ.5.25 கோடி, என்-95 முகக்கவசங்களுக்காக 48.05 லட்சம், பி.பி.இ. பாதுகாப்பு உடைகளுக்காக 41.3 லட்சம், ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை கிட்டுகளுக்காக 43.26 லட்சம் மதிப்பிலான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அவசர நிலையை கையாள 2,751 மருத்துவர்கள், 6,893 செவிலியர்கள், 1,058 லேப் டெக்னீஷியன்கள், 334 சுகாதார ஆய்வாளர்கள், 2,751 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 2,000 பாரா மெடிக்கல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி வீடுதோறும் கண்காணிப்பு செய்து வருகிறது. தினந்தோறும் 550 காய்ச்சல் மையங்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 33 ஆயிரம் காய்ச்சல் மையங்கள் மூலம் 17 லட்சம் மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 34 நிரந்தர மற்றும் 10 நடமாடும் மாதிரிகளை சேகரிக்கும் மையங்களை அமைத்துள்ளோம். இதுவரை 8 லட்சம் ஆர்.டி. பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 ஆயிரம் களப்பணியாளர்கள், 93 என்.ஜி.ஓ.க்கள், 2,700 தன்னார்வலர்கள் மூலம் அறிகுறியுள்ள தொற்றாளர்கள் கண்டறியப்பட்டும்,
எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குத் தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, 6 அமைச்சர்களையும் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நியமித்துள்ளேன். இதனால், சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதே நடவடிக்கைகளை மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மேற்கொள்கிறோம்.
47 லட்சம் குடிசைவாழ் பகுதி மக்களுக்கு மறுபடியும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசங்களை விநியோகித்துள்ளோம். அதன் பயன்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. மேலும், மற்ற மாநகராட்சிகள், நகராட்சி, கிராம ஊராட்சிகளில் 4.5 கோடி முகக்கவசங்களை விநியோகிக்க ஆர்டர் செய்யப்பட்டுள்ளன, விநியோகமும் தொடங்கப்பட்டுள்ளது.
இலவச அரிசி மற்றும் முழு கொண்டலைக் கடலையை இலவசமாக வழங்குவதற்கு கால அளவை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு மக்களின் உணவு முறையில் முழு கொண்டைக் கடலை பிரதானமான உணவுப்பொருளாக இல்லை. எனவே, தமிழகத்திற்கு நவம்பர் வரை வழங்க 55 ஆயிரத்து 637 மெட்ரிக் டன் துவரம் பருப்பை மத்திய அரசு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, மாநில அரசு முழு செலவை ஏற்றுக் கொண்டு 3.77 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களை 253 ரயில்களில் அனுப்பி வைத்துள்ளது.
இதுநாள் வரை 60 ஆயிரத்து 875 பயணிகள் வந்தே பாரத் மற்றும் சமுத்ரா சேது மிஷன் திட்டங்கள் மூலமும், தனியார் விமானங்கள் மூலமும் தமிழகத்திற்கு வந்துள்ளனர். கொரோனா தொற்று சம்பந்தப்பட்ட கருவிகள் மற்றும் மருந்துகளை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நான் சிறப்பு ஊக்க தொகுப்பினை அறிவித்துள்ளேன்.
தற்போது வரை 50 நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. மாநிலம் முழுவதும் வேளாண் தொழில், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உட்பட அனைத்துத் தொழில் நிறுவனங்களும் உற்பத்தியைத் தொடங்கியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தலைமையில், மாநிலத்தில் பொருளாதாரத்தை சீர்படுத்த உயர் மட்ட குழு அமைத்துள்ளேன். அவசர உத்தரவாத கடன் வரி உள்ளிட்ட திட்டங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக அறிவித்ததற்கு நன்றி. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அதிகப்படியான கடன் வழங்க வலியுறுத்தியுள்ளேன்.
இதுவரை, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 841 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5,329 கோடி ரூபாய் அளவில் கடன்கள் வழங்கியுள்ளோம். மேலும் பிரதமரிடம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 712.64 கோடி ரூபாயில், 512.64 கோடி ரூபாயை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளோம். எனது முந்தைய வேண்டுகோளின்படி தமிழகத்திற்கான இந்த தொகுப்பை 3,000 கோடி ரூபாய் வரை உயர்த்த கோருகிறேன்.
மத்திய மற்றும் மாநில வரி வருவாய், பட்ஜெட் மதிப்பீடுகளுக்குக் குறைவாக இருக்கும். பற்றாக்குறையை ஈடுசெய்ய, கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் சிறப்பு மானியம் ஒதுக்கக் கோருகிறேன்.
ஏப்ரல்-ஜூன், 2020-க்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும். தொற்றுநோயை எதிர்த்துப் போராட உடனடியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய் மானியம் கோருகிறேன்.
இந்த நேரத்தில் 1,321 கோடி ரூபாய் நிலுவையில் உள்ள சி.எம்.ஆர். மானியத்தை வெளியிடுவது, நெல் கொள்முதல் செய்ய உதவும். மின் துறையில் உடனடி சுமையை குறைக்க நிவாரணத் தொகுப்பை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கோவிட் சூழ்நிலையில், பல்வேறு வெளிப்புற நிதி நிறுவனங்களுக்காக எனது அரசு இந்திய அரசுக்கு பல வெளிப்புற உதவித் திட்டங்களை முன்மொழிந்துள்ளது.
இதற்கு சம்பந்தப்பட்ட இந்திய அரசு நிறுவனங்களின் ஆரம்ப ஒப்புதல் விரைவான விநியோகத்தை செயல்படுத்த உதவும், இது பரந்த பொருளாதார மறுமலர்ச்சி முயற்சிகளுக்கு பங்களிக்கும்.
ரிசர்வ் வங்கியின் சிறப்புத் தொகுப்புகளில் இருந்து தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழக நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 1,000 கோடி ரூபாய் மறுநிதியளிப்பு வசதியாக வழங்குமாறு எஸ்.ஐ.டி.பி.ஐ.க்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களை புதுப்பிக்க உதவும். சுய உதவிக் குழுக்களுக்கான கோவிட் -19 க்கான சிறப்பு கடன் தயாரிப்பு அனைத்து வங்கிகளாலும் ஒரு குழுவுக்குக் குறைந்தது 2 லட்சம் ரூபாய்க்கு மேம்பட்ட கடன் தொகையும், மேம்பட்ட வட்டி அடக்கமும் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
மேம்பட்ட முன்பண வட்டி ஒழிப்புக்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் வகை -1 இல் கொண்டு வர வேண்டும் சுய உதவிக் குழுக்களுக்கு இந்திய அரசு உத்தரவாதத்துடன் மேம்படுத்தப்பட்ட மொத்த கடன்களின் சி.ஜி.எப்.எம்.யூ. திட்டம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்,
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்து நிலை கூட்டமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 5 days ago |
-
பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கம் : அன்புமணி நடவடிக்கை
02 Jul 2025சென்னை : பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
-
மத நம்பிக்கையில் தலையிட முடியாது: கண்டதேவி தேரோட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
02 Jul 2025மதுரை : ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பழக்க வழக்கம், மத நம்பிக்கை உள்ளது.
-
காவலாளி அஜித்குமார் மரணம்: த.வெ.க. சார்பிலான ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
02 Jul 2025சென்னை : காவலாளி அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று த.வெ.க. சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ள நிலையில், த.வெ.க.
-
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கோவிட் தடுப்பூசி காரணமில்லை : மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
02 Jul 2025புதுடெல்லி : கோவிட்-19 தடுப்பூசிகளுக்கும், மாரடைப்பு காரணமாக ஏற்படும் திடீர் மரணங்களின் அதிகரிப்புக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும
-
தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி பிரச்சனை: மத்தியஸ்தரை நியமித்தது ஐகோர்ட்
02 Jul 2025சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்
-
5 ஆண்டுகளும் நான்தான் முதல்வர்: சித்தராமையா திட்டவட்டம்
02 Jul 2025பெங்களூரு : கர்நாடக முதலமைச்சராக 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வேன் என்று சித்தராமையா உறுதியாக தெரிவித்தார்.
-
தைரியமா இருங்க, நாங்க இருக்கோம்: அஜித்குமார் குடும்பத்தாரிடம் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்
02 Jul 2025சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவன் காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு செல்போன் அழைப்பு மூலம் அ.தி.மு.க.
-
கனமழை, திடீர் வெள்ளப்பெருக்கு: இமாச்சலப்பிரதேசத்தில் 10 பேர் பலி
02 Jul 2025சிம்லா : இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 32 மணி நேரத்தில 10 பேர் உயிரிழந்தனர், 34 பேர் காண
-
சீமான் மீதான டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
02 Jul 2025மதுரை : சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
-
தேவையில்லாமல் விசாரணை கைதிகளை துன்புறுத்தக்கூடாது : காவலர்களுக்கு ஏ.டி.ஜி.பி.டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தல்
02 Jul 2025சென்னை : குடும்பமாக செல்வோரிடம் வாகன தணிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றும் விசாரணை கைதிகளை காவலர்கள் தேவையில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஏ.டி.ஜி.
-
புதிய வாரிசை அறிவிக்க தலாய் லாமா மறுப்பு? - தேர்ந்தெடுக்க அறக்கட்டளைக்கு அதிகாரம்
02 Jul 2025கான்பெரா : தற்போதைய 14வது தலாய் லாமா, புதிய வாரிசை அறிவிக்க மறுத்துவிட்டார். புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க திபெத் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளித்தார்.
-
பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை : திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
02 Jul 2025சென்னை : கேலி செய்பவர்களை குறித்து கவலையில்லை என்றும், பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் தி.மு.க., அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சென்னையில்
-
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி? - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
02 Jul 2025வாஷிங்டன் : ரஷ்யாவிடம் எண்ணெய், எரிபொருட்களை வாங்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கக்கூடிய செனட் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு
-
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்: ட்ரம்ப்
02 Jul 2025வாஷிங்டன் : காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
-
கோவில் காவலர் மரண வழக்கு: திருப்புவனத்தில் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை
02 Jul 2025திருப்புவனம் : காவலர்கள் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமார் வழக்கு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் நியமித்த மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் வ
-
இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம்: டிரம்ப் தகவல்
02 Jul 2025வாஷிங்டன் : இந்தியாவுடன் குறைந்த வரியுடன் கூடிய ஒப்பந்தம் செய்யப்படலாம்' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச அணுசக்தி அமைப்புடன் ஒத்துழைப்பு இடைநிறுத்தம்: ஈரான்
02 Jul 2025டெஹ்ரான் : ஐ.நா.வின் அணுசக்தி காண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி அமைப்பு உடனான ஒத்துழைப்பை இடைநிறுத்தம் செய்து ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் உத்தரவிட்டுள்ளார்.
-
2 மடங்கு கட்டணம் வசூலிக்க ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு புதிய அனுமதி
02 Jul 2025புதுடெல்லி : ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் உயிரிழப்பு
02 Jul 2025நாமக்கல் : பெண் சிறப்பு சப்/ இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
-
தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்பது அத்துமீறல்: உயர் நீதிமன்றம்
02 Jul 2025சென்னை : குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனி நபரின் உரையாடலை ஒட்டுக் கேட்பதை அனுமதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
-
பரமக்குடி–ராமநாதபுரம் 4 வழிச்சாலை திட்டம்: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
02 Jul 2025சென்னை : ரூ. 1,853 கோடி மதிப்பில் தொடங்கப்பட உள்ள பரமக்குடி- ராமநாதபுரம் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை அ.தி.மு.க.
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை
02 Jul 2025டாக்கா : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
-
தமிழகம் முழுவதும் காவல் தனிப்படைகள் கலைப்பு : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவு
02 Jul 2025சென்னை : தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த அங்கீகரிக்கப்படாத போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை தொடங்கினார் சுக்லா
02 Jul 2025நியூயார்க் : சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுகளை சுபான்ஷூ சுக்லா தொடங்கினார்.